கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள்
கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள்.
இரண்டு ஆண்டுகளாக தோண்டினார்கள், அதில் கிடைக்கபெற்ற பொருட்களை ஆய்வுசெய்ததில் அது கிட்டதட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தபின் தோண்டுவதில் ஏனோ இவர்களுக்கு விருப்பமில்லை
மெதுமெதுவாக அமைதியாகி மொத்தமாக மூடிவிட்டார்கள்
இதில் ஏதோ பெரு மர்மம் உள்ளது என்பதும், எதனையோ சொல்ல விரும்பவில்லை என்பதும் உண்மை
ஆதிச்சநல்லூரிலும் இதே கொடுமைதான் அரங்கேறிற்று, அங்கு கிடைத்த பொருட்கள் கிட்டதட்ட 6 ஆயிரம் காலத்திற்கு முற்பட்டவை என செய்திகள் வந்தபின் அதனையும் நிறுத்தினார்கள்
இப்பொழுது கீழடியினையும் நிறுத்துகின்றார்கள்
கீழடி என்பது நிச்சயம் கண்ணகி காலத்தோடு தொடர்புடைய நகரமாமாகத்தான் இருக்கவேண்டும்
ஏன் மறைக்கின்றார்கள்? இதனால் என்ன லாபம் இவர்களுக்கு கிடைத்துவிடுகின்றது? என்பதுதான் தெரியவில்லை
தமிழரின் தனிபெரும் அடையாளமான இந்த இடங்களின் உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு சொல்லவேண்டியது தமிழக அரசின் கடமை
அதுவோ மத்திய அரசின் கால்களுக்கு அழுக்கெடுக்கும் வேலையினை செய்துகொண்டிருக்கும்பொழுது எந்த ஆய்வு நின்றால் அவர்களுக்கென்ன?
உலகில் மிகுந்த விலைமதிப்பில்லாதது பாரம்பரிய பெருமையும், அந்த பழங்கால பொக்கிஷமும்
அவை எல்லாம் காலத்தால் மட்டுமே கொடுக்க கூடியது, 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ்முன்னோர்கள் நமக்காக விட்டுசென்றது
இதனை எல்லாம் நினைத்தாலே நெஞ்சம் பதறத்தான் செய்கின்றது, இவைகளில் எல்லாம் மாநில அரசு தன் உரிமைகளை வென்று பாதுகாக்க வேண்டும்
எவ்வளவு பெரும் பொக்கிஷத்தை கண் முன்னே மறைத்துவிட்டு, அந்த ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா , ஜெயாவிற்கு மணிமண்டம என பலகோடி ரூபாய்களை வீணாக செலவழிக்கின்றது தமிழக அரசு
அற்ப நடிகனுக்கெல்லாம் கோடிகணக்கில் செலவழிக்கும் தமிழகத்தில், எம்.எல்.ஏக்கள் லட்சகணக்கில் சம்பளம் வாங்கும் தமிழகத்தில், இன்னும் எங்கெல்லாமோ கருப்பு பணம் வெள்ளமாக பாயும் தமிழகத்தில்
தமிழனின் மிகபெரும் பாரம்பரியமான கீழடியினையும், ஆதிச்சநல்லூரையும் தோண்டிபார்க்க பணமில்லையாம்..
அது தனியார் நிலமாம் கொடுத்துவிட்டார்களாம், எவனோ ஒருவனுக்கு கல்லீரல் இல்லையென்றால் அதனை வாங்க கோடிகணக்கான பணம் எங்கிருந்தோ வருகின்றது, அரசும் அனுமதிக்கின்றது.
ஆனால் தமிழனின் தொன்மை காக்க அந்நிலத்தை கையகபடுத்த அரசுக்கு பணமில்லையாம், ஆனால் எம்.எல்.ஏ சம்பளம் எல்லாம் கூட்டி கொடுப்பார்களாம்.
கண்முன்னே மூடபடும் குழிகள் , தமிழனின் பெருமையினை கல்லறையில் அடக்கம் செய்யபடுவதையே கண் முன் நிறுத்துகின்றன, கண்ணீர்தான் வருகின்றது
மனம் நொந்துபோகும் நேரமிது.