குஜராத் தேர்தல் முடிவுகள் வரதொடங்கிவிட்டன
“அய்யோ பரமா சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா…
ஏதாவது செய்யணும் பரமா..”
ஆத்தா S Prema உங்க பார்ட்டி ஜெயிச்சிட்டு, அதுக்காக ரொம்ப சிரிக்காதீங்க
இந்த குழந்தை பையன் பயந்துபோயிட்டேன் ,
அந்த லட்டு கொடுத்திங்கண்ணா வாங்கிட்டு ஓடிபோயிருவோம், அப்புறமா சிரிச்சிக்கோங்க
குஜராத் தேர்தல் முடிவுகள் வரதொடங்கிவிட்டன, இனி அக்கும்பல் கொண்டாடி தீர்க்கும் போல
வோட்டுமெஷின் எல்லாம் குறை சொல்லமுடியாது. அதில் தில்லுமுல்லு என்பது சச்சினின் மட்டையில் ஸ்பிரிங் உண்டு என்பது போல் அபத்தமானது, வேறு காரணங்களை வேண்டுமானால் தேடலாம்
யார் செய்யும் அழிச்சாட்டியத்தை கூட தாங்கலாம். இந்த தமிழிசையின் வெற்றி சிரிப்பை கூட பொறுத்துகொண்டு லட்டு வாங்கலாம்
ஆனால் Jebamani Mohanraj , S Prema போன்றோரின் அழிச்சாட்டியங்களை இன்று தாங்க முடியாது, என்ன செய்யலாம்?
பலர் இன்று ஆடுவெட்டும் சுடலை சாமியின் கோலத்தில் ஆடுவார்கள்.
எங்காவது ஓடிவிட வேண்டியதுதான், நிச்சயம் விரட்டி வந்து கலாய்பார்கள், சகித்துகொள்ள வேண்டிய தருணம் இது
ஆனானபட்ட இயேசுநாதரே சிலுவையில் கடவுளால் கைவிடபட்டிருக்கின்றார், நாமெல்லாம் எம்மாத்திரம்
காங்கிரஸ் காங்கிரஸ் ஏன் எம்மை கைவிட்டாய்..