குடும்பத்தை ஒழித்த சாகசகாரி
கொலையும் செய்வாள் பத்தினி என்பார்கள், பத்தினியே ஒரு கொலை செய்யும் பொழுது பரத்தை செய்யமாட்டாளா?
கேரளாவில் அப்படி நடந்திருக்கின்றது, கணவனையும் அவன் குடும்பத்தார் 7 பேரையும் மாட்டு சூப்பில் சயனைடை கலந்து கொடுத்து கொன்று கணவனின் தம்பியோடு மொத்த சொத்தையும் ஆட்டையினை போட்டிருக்கின்றாள் ஒருத்தி
அவள் கொன்றதில் 10 மாத குழந்தையும் அடக்கம்
எல்லா கொலைகளையும் செய்துவிட்டு சிரித்த முகமாக மகா பவ்வியமக அக்கம் பக்கத்தில் நடமாடியிருக்கின்றாள், பல்ல்லாண்டுகளாக காக்கபட்ட ரகசியம் வெளிவந்து அவளிடம் விசாரணை நடக்கின்றது
காக்கபடும் ரகசியம் என உலகில் எதுவுமில்லை என்பது இதுதான்
ஆட்டோ சங்கரையும் மிஞ்ஞ்சும் அளவு அந்த கொலைகாரியின் ரகசிய கொலைகள் இருந்திருக்கின்றன, அவள் இன்னும் பல கொலைகள் செய்திருக்கலாம் என்ற வகையில் விசாரணை நீள்கின்றது
இந்த கொலைகள் பற்றி மேலதிக தகவல் பெற நக்கீரனைத்தான் தேடவேண்டும் இம்மாதிரி விவகாரங்களில் அவர்கள்தான் மிகுந்த ரசனை மற்றும் ஆர்வமாய் செய்திகளை தருவார்கள்
கணவனின் தம்பியோடு சேர்ந்து குடும்பத்தை ஒழித்த சாகசகாரி என டைட்டில் போட்டு அசத்துவார்கள்
ஆனால் விஷயம் கேரளா என்பதால் மகா அமைதியோ என்னமோ?