குட்கா முறைகேடு
குட்கா முறைகேடு- தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை
இதில் சில அமைச்சர்கள் வீடும் உண்டு என்கின்றன செய்திகள்
மாநிலத்தில் பழனிச்சாமி ஆட்சியில் இந்த ரெய்டு நடப்பது மாபெரும் அவமானம், நிச்சயம் மிகபெரும் ஊழல் ஆட்சி என பெயர் பெற்றுவிட்ட இந்த ஆட்சி ராஜினாமா செய்யபடவேண்டும், அல்லது டிஸ்மிஸ் செய்யபட வேண்டும்.
தமிழக வரலாறு காணா அவமானமாக காவல்துறை டிஜிபி வீட்டிலே சோதனை நடக்கின்றது, எதற்காக குட்கா விவகாரத்திற்காக
காவல்துறைக்கான அமைச்சர் யார்? சாட்சாத் பழனிச்சாமி
நிச்சயம் அவர் பதவி விலக வேண்டும், இந்த பெரும் களங்கத்தை கொண்ட ஆட்சி நீடிக்க கூடாது
ஆனால் யாராவது பேசுவார்களா என்றால் இல்லை
இப்பொழுதும் பழனிச்சாமி ஆட்சியில் ஊழலாமே என கேட்ட்டால் கண் சிவக்க “பாசிச பாஜக ஒழிக , மதவாத சக்தி தமிழகத்தில் காலூன்ற முடியாது” என சிரிக்காமல் சொல்வார்கள்