“குதிரை பேர அரசு” என சொல்லி கொண்டிருப்பது எரிச்சலை கொடுக்கின்றது

இந்த செயல் தலைவர் எதற்கெடுத்தாலும் இந்த பழனிச்சாமி அரசினை “குதிரை பேர அரசு” என சொல்லிகொண்டிருப்பது எரிச்சலை கொடுக்கின்றது

குதிரை பேரத்திற்கு ஒரு காலம் இருந்தது, இப்பொழுது அதனை எல்லாம் கடந்து மத்திய அரசினை சுமக்கும் குதிரை வாகனமாக அது மாறிவிட்டது

அது புரியாமல் இந்த செயல் தலைவர் அது குதிரை பேர அரசு என சொல்லிகொண்டே இருக்கின்றார்

காலத்திற்கு ஏற்ப மாற்றி சொல்ல வேண்டாமா?

முன்பு குதிரை பேர அரசாக இருந்த இந்த அரசு இப்பொழுது மத்திய அரசின் கையில் கடிவாளமுள்ள “குதிரை வாகன அரசாக” மாறிவிட்டது, மத்திய அரசு எனும் பல்லாக்கினை இழுக்கின்றது என சொல்ல வேண்டாமா?

அதல்லவா திராவிட பாரம்பரிய சீண்டல்???