குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 55

“புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை
வௌியிட்டு வேறாதல் வேண்டுங் – கழிபெருங்
கண்ணோட்டஞ் செய்யார் கருவியிட் டாற்றுவார்
புண்வைத்து மூடார் பொதிந்து”

அடுத்த நாட்டை கைபற்றும் பகை எண்ணத்தை வெளியிட்டு அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி கவலையுறாத மன்னன் நிலையானது, தன் உடல் புண்ணுக்கு மருந்திடாமல் தானே ஆறட்டும் என கருதும் நிலமையினை போன்றது.

அதாவது அடுத்த நாட்டை பிடிக்கும் எண்ணமிருந்தால் அதை மறைத்து வைத்து தக்க நேரம் கைபற்ற வேண்டும், எதிரியின் வளம் செல்வமெல்லாம் கண்ணை உறுத்தினாலும் அதை மனதிலே வைத்து கவனித்துவர வேண்டும், மாறாக அதையெல்லாம் வெளி சொல்லி அவன் பகைவன் அவனை பிடித்து தீருவேன் என சொல்லி திரிவது புண்ணுக்கு மருந்திடாத வலி போன்றது என்பது பொருள்

எதிரி நாடு ஒரு மன்னனுக்கு எப்பொழுதும் வலிகொடுக்க கூடியதுதான், அதை தீர்க்கும் வகைகள் ரகசியமாக இருக்கவேண்டுமே தவிர அப்படியே புலம்பி திரிவதால் பலனில்லை என்பது பொருள்

இது மன்னனுக்கு மட்டுமல்ல மனதால் பல திட்டங்களை வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும், ஒரு திட்டம் நிறைவேறும்வரை அது மறைவாய் இருத்தல் நலம்