குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 61′
“குலம்விற்றுக் கொள்ளும் வெறுக்கையும் வாய்மை
நலம்விற்றுக் கொள்ளுந் திருவுந் தவம்விற்றாங்
கூனோம்பும் வாழ்வு முரிமைவிற் றுண்பதூஉம்
தானோம்பிக் காத்த றலை”
தன் குலப் பெருமையை விற்றுவிட்டுப் பணம் சேர்த்தல், வாய்மையை விற்றுவிட்டுப் பொய் பேசி அவரிடம் நல்ல பொயர் வாங்குதல், தவ ஒழுக்கத்தை விற்றுவிட்டு உடல் பசிக்கு இன்பம் தேடல், உரிமையை விற்றுவிட்டு அடிமைத்தொழில் செய்து வயிறு வளர்த்தல் ஆகிய இழி குணங்கள் நம்மிடம் சேராமல் காத்து கொள்வது தலையானது என்பது பொருள்
குலபெருமை, வாய்மை, தவ ஒழுக்கம், உரிமை ஆகியவற்றை எப்பாடுபட்டேனும் காக்க வேண்டும் என்கின்றார் குமரகுருபரர்.