குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 66
“வள்ளன்மை யில்லா தான் செல்வத்தின் மற்றையோன்
நல்குரவே போலு நனிநல்ல கொன்னே
அருளில னன்பிலன் கண்ணறைய னென்று
பலரா லிகழப் படான்”
செல்வம் நிறைய வைத்து கொண்டு யாருக்கும் கொடுக்கும் மனமில்லாதவன் அதை வைத்திருப்பதை விட ஒன்றுமில்லாமல் வறுமையில் வாடுதல் நன்று. செல்வம் இருந்தும் பிறருக்கு கொடுக்காதவனை அருளும் அன்பும் இல்லாதவன், மனதில் இரக்கம் இல்லாதவன், பிறர் கஷ்டம் காணாத குருடன் என சொல்லும் உலகம் வறியவனை அப்படி சொல்லாது என்பது பாடலின் பொருள்
ஈயாத செல்வந்தனை விட வறுமையில் வாடும் ஏழையாக இருப்பது நல்லது, செல்வத்தின் மதிப்பே ஈந்து வாழ்வதில்தான் இருக்கின்றது என்பது பாடலின் பொருள்.