குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 70

“செயக்கடவ வல்லனவுஞ் செய்துமன் னென்பார்
நயத்தகு நாகரிக மென்னாம் – செயிர்த்துரைப்பின்
நெஞ்சுநோ மென்று தலைதுமிப்பான் றண்ணளிபோல்
எஞ்சா தெடுத்துரைக்கற் பாற்று”

தன்னிடம் அடைக்கலமாகி உதவி கேட்டு வருபவனிடம் தன்னால் முடியாத ஒன்றை முடியும் என சொல்லி அதாவது இரக்கம் கொண்டு தன்னை நல்லவன் என காட்ட‌ அவன் கோரிக்கையினை ஏற்று ஆனால் காரியத்தை முடிக்காமல் இழுப்பது எப்படியானது என்றால் ஒருவன் மனம் நோகாமல் இருக்க அவன் தலையினை வெட்டுவதற்கு சமம்

ஒருவனுக்கு உதவ முடியவில்லை என்றால் முடியாது என முதலிலே சொல்லிவிட வேண்டும் மாறாக தன்னால் முடியாத ஒன்றை முடியும் என சொல்லி அவனை நம்ப வைத்து காலம் தாழ்த்தி ஏமாற்றுவது அவனை கொல்வதற்கு சமம் என்பது பாடலின் பொருள்