குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 97
குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 97
“எவரெவ ரெத்திறத்த ரத்திறத்த ராய்நின்
றவரவர்க் காவன கூறி – எவரெவர்க்கும்
உப்பாலாய் நிற்பமற் றெம்முடையார் தம்முடையான்
எப்பாலு நிற்ப தென்”
நல்ல ஆசிரியர் என்பவர் தன் மாணக்கர்களில் எவர் எந்தத் திறம் உடையவர் ஆயினும், அவரவர் அவருடைய திறமைக்கு ஏற்ப நின்று கடமையாற்றி அவரவர்க்கு ஆவன கூறி அவரை எல்லோருக்கும் மேலாக உயர்த்தி வைப்பர் , பரம்பொருள் பக்தனுக்கு அருள்வழங்கி காப்பது போல் காத்து வருவார்கள்
நல்ல ஆசிரியர்கள் தன் மாணவனுக்கு அவன் திறமைக்கு ஏற்ப கற்றுகொடுத்து மேம்படுத்தி, இறைவன் பக்தனுக்கு அருள் புரிவதுபோல புரிந்து காத்து உயர்த்துவார் என்கின்றார் குமரகுருபரர்
குருவும் தெய்வமும் ஒன்று , மாணவனும் பக்தனும் ஒன்று என சுருக்கமாக சொல்கின்றார் அந்த இந்து ஞானி