குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 100

“கற்றாங் கறிந்தடங்கித் தீதொரீஇ நன்றாற்றிப்
பெற்றது கொண்டு மனந்திருந்திப் – பற்றுவதே
பற்றுவதே பற்றிப் பணியறநின் றொன்றுணர்ந்து
நிற்பாரே நீணெறிச்சென் றார்”

கற்றதை நன்கு தெரிந்துகொண்டு, அடக்கத்துடன், தீயனவற்றை நீக்கி, நல்லன செய்து, பெற்றிருப்பதைக் கொண்டு மன நிறைவுடன் திருத்தமாகப் பற்றவேண்டியதைப் பற்றி, பணி அறவழியில் நிற்க, ஒன்றாக விளங்கும் இறைவனை உணர்ந்து, நின்று ஒழுகுபவரே, நீண்ட நன்னெறியில் செல்பவர் ஆவார் என்கின்றார் குமர குருபரர்.