குமரகுருபரர் நீதிநெறி விளக்கம் : 14

“முற்று முணர்ந்தவ ரில்லை முழுவதூஉம்
கற்றன மென்று களியற்க – சிற்றுளியாற்
கல்லுந் தகருந் தகரா கனங்குழாய்
கொல்லுலைக் கூடத்தி னால்.

இப்பாடல் “முற்றும் உணர்ந்தவர் இல்லை முழுவதும் கற்றனம் என்றும் களியற்க, சிற்றுளியால் கல்லும் தகரும்ம் தகரா கனங்குழாய் கொல் உலை கூடத்தினால்” என பொருள் விளங்க பிரியும்

இந்த உலகில் எல்லாம் கற்றவர் என யாருமில்லை, அப்படி கற்றுவிட்டதாக கருதி கர்வம் கொள்ள கூடாது, பெரும் பாறையும் கொல்லன் உலையில் செய்யபட்ட சிறு உளியால் தகர்ந்து போகும் என்பது பொருள்

கனங்குழாய் என்பது காதில் பெரிய நகைகளை அணிந்த பெண்ணை குறிப்பது

காதில் நகை அணிந்த பெண்ணே, எல்லாம் கற்றவர் என யாருமில்லை, அந்த கர்வம் அர்த்தமில்லாதது. தகர்க்க முடியா பெரும் பாறையினையும் கொல்லன் உலையில் செய்த உளியும் சம்மட்டியும் தகர்த்துவிடும் என பாடுகின்றார் குமரகுருபரர்

எல்லாம் கற்ற பெரும் அறிவாளி என்றாலும் ஏதாவது ஒரு பக்கம் பலவீனமாகத்தான் இருக்கும், எல்லாம் அறிந்தவர் என யாருமில்லை அப்படி ஒருவர் தன்னை கர்வமாக‌ கருதினால் மிக சிறிய அறிவு கொண்ட ஒருவரால் அவருக்கு அவமானம் வந்து சேரும் என்பது பாடலின் பொருள்.