குமரகுருபரர் நீதிநெறி : 57
“மனத்த கறுப்பெனி னல்ல செயினும்
அனைத்தெவையுந் தீயவே யாகும் – எனைத்துணையும்
தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே
மாசின் மனத்தி னவர்”
கறுமையான மாசடைந்த மனதுடன் நன்மையே செய்தாலும் அச்செயல் தீமையிலேதான் முடியும் நல்ல விளைவினை கொடுக்காது, நல்ல மனதுடன் கெட்டதை முயற்சித்தால் கூட அது நன்மையாகத்தான் முடியும்
பாம்பு தன் வாயில் நீரை கொண்டுவந்து குடிக்க கொடுத்தால் கூட, இன்னொரு உயிரை பிழைக்க வைக்க விரும்பினால் கூட அதனால் முடியாது காரணம் அந்த விஷயம் இயல்பானது
அதே நேரம் ஒரு யானை யார் மேலாவது வீசியெறியும் சோற்று கவளத்தில் பல்லாயிரம் எறும்புகள் கூட பசியாறும்
ஒருவன் செய்யும் உதவி அல்ல விஷயம், அவன் எப்படிபட்ட மனதோடு செய்கின்றான் என்பதில்தான் நல்ல விளைவு நடக்கும் என்பது பாடலின் பொருளாகும்