குமரகுருபரர் நீதி நெறிவிளக்கம் : 68

குமரகுருபரர் நீதி நெறிவிளக்கம் : 68

“சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல்
நல்வினை கோறலின் வேறல்ல – வல்லைத்தம்
ஆக்கங் கெடுவ துளதெனினு மஞ்சுபவோ
வாக்கின் பயன்கொள் பவர்”

நம்சொல்லுக்கு ஒரு வலிமை இருக்கின்றது செல்வாக்கு இருக்கின்றது என்பதற்காக அதனை அடிக்கடி பயன்படுத்தி பேசிகொண்டே இருப்பது அந்த செல்வாக்கை கொல்லும் செயல் அன்றி வேறல்ல. வார்த்தைகளின் வலிமையானதுஅடிக்கடி அதனை பேசிகொண்டே இருந்தால் அகன்றுவிடும்

செல்வாக்கு உள்ளவனின் வார்த்தையானாலும் தேவைபடும் இடம் அன்றி எல்லா இடங்களிலும் பேசபடுமானால் அது மதிப்பிழக்கும், பயனற்ற சொற்கள் மதிப்பை கெடுத்துவிடும்

இதைத்தான் “பயனில சொல்லாமை” என, அதாவது பயனற்ற சொற்களை பேச கூடாது என ஒரு அதிகாரம் முழுக்க போதித்தான் வள்ளுவன்