குமரகுருபரர் : 05
“அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார்அவையஞ்சா வாகுலச் சொல்லும் – நவையஞ்சிஈத்துண்ணார் செல்வமு நல்கூர்ந்தா ரின்னலமும்பூத்தலிற் பூவாமை நன்று”
இந்த பாடல் பொருள் கொடுக்கும் ரீதியாக இப்படி பிரியும்
“அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் (வியர்த்தது நடுங்குவார்) கல்வியும் கல்லார்அவை அஞ்சா ஆகும் சொல்லும் நவை (நயத்தல் எனும் கொடை) அஞ்சிஈர்த்து உண்ணால் செல்வமும் நல் கூர்ந்ந்தின் இன்நலமும்பூத்தலில் பூவாமை நன்று”
அதாவது சில வகை தன்மைகள் அல்லது குணங்கள் சிலருக்கு கிடைக்காமல் இருப்பது நல்லது என்கின்றார் குமரகுருபரர் இப்படியாக
அவை நடுக்கம் கொண்டோருக்கு கல்வி கிடைக்காமல் இருந்தால் நல்லது என்கின்றார், கல்வியின் பலனே சபையில் நற்கருத்துக்களை எடுத்து வைப்பது எனும்பொழுது அவை நடுங்கி உடல் வியர்த்து சபையில் பேச அஞ்சுவோரின் கல்வி பலனற்றதாகின்றது அதனால் பலன் இல்லை
துரியன் அவையில் கற்றமேதைகளின் நிலை இப்படித்தான் இருந்தது
அப்படியே தலைகீழாக கல்வி அறிவு இல்லாதவன் கற்றோர் நிரம்பிய சபையில் தைரியமாக பேசும் குணமும் ஆபத்தானது, அவன் மூடன் ஒரு விஷயமும் சரியாக அறியாத தற்குறி அப்படிபட்ட தற்குறி சபையில் தைரியமாக பேசினால் அதனால் பலன் இல்லை மாறாக வீண் குழப்பமும் சர்ச்சையுமே உருவாகும் அந்த குணமும் அமையாமல் போனால் நல்லது என்கின்றார்
அதே பாரதத்தின் கவுரவரின் பேச்சுக்கள் சபையில் இப்படித்தான் அமைந்திருந்தன, சிசுபாலனின் வதம் கூட இதன் சாயலே
ஈகை குணம் இல்லாத செல்வனின் செல்வமும் அப்படியானதே, அவனால் யாருக்கும் எந்த நன்மையுமில்லை அவனிடம் அந்த குணம் இருப்பது பலனற்றது அது இல்லாமல் இருந்தால் நல்லது
தன்வீடு தன் மனைவி தன் குழந்தை என முடங்கி பெற்ற தாயினையும் உடன்பிறந்தோரையுமே விலக்கி பணம் ஒன்றுக்கே வாழும் ஏகபட்ட மானிட பதர்களே சாட்சி, இவ்வகை கூட்டம் எக்காலமும் உண்டு குளத்துநீர் கொஞ்சமானாலும் அள்ளி பருகலாம், கடல்நீர் பரந்தது விரிந்தாலும் ஒருதுளி பருகமுடியாது. பசுவிடம் கட்டும் பாலுக்கும் பன்றியிடம் கட்டும் பாலுக்கும் வித்தியாசம் உண்டு.
அப்படியே தலைகீழாக தர்மமும் கொடைகளும் வழங்கும் மனம் கொண்ட ஏழைகளின் குணம் வலிதரகூடியது, ஏழைமக்களாக இருந்தாலும் தங்களால் அள்ளி கொடுக்கமுடியவில்லையே எனும் வலி அவர்களிடம் எக்காலமும் இருக்கும், அந்த குணம் இல்லாமல் இருந்தால் அவர்கள் நிம்மதியாக இருப்பார்கள்
இன்றும் ஆலய வாசலில் அழுது புலம்பி பகவனானிடம் கையேந்தி நிற்கும் கோடான கோடி நல்ல மனம் கொண்ட ஏழைகளின் வலி இது
ஆக ஒருவகையில் இந்த சமூகத்தினை கூர்ந்து கவனித்து ஒருவனிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்கள் தகுதி இல்லாதோரிடம் மாறி சிக்கிகொண்டு கொடுக்கும் விசித்திரமான முரண்களை கொண்டு இந்த பாடலை தத்துவரீதியாக பாடியிருக்கின்றார் அந்த குமரகுருபரர்