குமரி வள்ளுவர் சிலை வயது இன்றோடு 18…
கன்னியாகுமரி கடற்கரை என்பது கடலில் மூழ்கிய கபாடபுரத்தின் எச்சம், முதல் இரண்டு தமிழ்சங்கம் அங்குதான் இருந்ததாக வரலாறு சொல்கின்றது
அந்த கன்னியாகுமரியில் தமிழரின் அடையாளம் ஏதும் உண்டா என்றால் இல்லை, காந்திக்கொரு மண்டபம் கட்டினார்கள், அப்படியே விவேகானந்தருக்கொரு மண்டபம் கட்டினார்கள்
உண்மையில் விவேகானந்தருக்கு தமிழகத்தில் சிறப்பான கட்டடம் அமைந்திருக்க வேண்டியது சென்னையிலும் அவர் அமெரிக்கா சென்றுவிட்டு திரும்பி கால்பதித்த பாம்பன் பக்கமுமே ஆகும்
ஆனால் அதனை எல்லாம் விட்டுவிட்டு கன்னியாகுமரியிலே அவர்கள் குறியாக இருந்தனர், அதில் சிக்கலும் இருந்தது பக்தச்சலம் போன்றவர்கள், ராண்டே போன்றவர்கள் இருந்ததால் ராமர் கோவில் அளவிற்கு சிக்கல் இல்லாமல் போயிற்று
அந்த தமிழரின் கடற்கரை தமிழருக்கான அடையாளமின்றியே இருந்தது, அதில் ஒரு குன்று காலியாகவும் இருந்தது
அங்குதான் வான்புகழ் கொண்ட வள்ளுவனுக்கு 133 அடியில் சிலை அமைத்து பெரும்புகழ் கொண்டார் கலைஞர், அது திறக்கபட்டு இன்றோடு 18 வருடம் ஆகின்றது
உண்மையில் கலைஞரின் மிகசிறந்த பணி அது, வள்ளுவன் கன்னியாகுமரி பக்கமே பிறந்தான் என்றும் , அங்கு வள்ளுவ நாடு என்றோரு பகுதி உண்டு என்பதும், இன்றும் குறளில் வரும் பல சொற்கள் குமரி மக்களின் சொல்வழக்கில் உண்டு என்பதெல்லாம் பல ஆய்வுகளில் வந்தவை
கபாட புரத்தின் எச்சமாக, தமிழரின் அடையாளமான அந்த குமரியில் தமிழ் தத்துவ அறிஞன் வள்ளுவனின் சிலை வீற்றிருப்பது நிச்சயம் வாழ்த்துகுரிய விஷயம்
அந்த சிலை வள்ளுவனின் புகழை போல் நிலைத்திருக்கட்டும்
என்னதான் சொன்னாலும், இம்மாதிரி நினைவு சின்னங்கள் அமைப்பதில் அந்த மனிதனின் முத்திரை யாருக்கும் வராது, தமிழர் அடையாளங்களை மிக உறுதியாக நிலை நிறுத்தியவர் அந்த கலைஞர்