குமாரசாமி பதவி ஏற்றவுடன் நெருக்கடி
குமாரசாமி பதவி ஏற்றவுடன் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் காரியங்களை செய்ய ஆரம்பித்துவிட்டார் எடியூரப்பா
விவசாய கடன்களை ரத்து செய்வதாக தன் 20 மணி நேர முதல்வர் பதவியில் சொல்லியிருந்தார் மிஸ்டர் எடி, ஆனால் அது செல்லாது என்பதால் கடன் ரத்தாகவில்லை
இப்பொழுது குமாரசாமி அக்கடன்களை ரத்து செய்ய முடியாது என்கின்றார், எடியூரப்பா இடையூரப்பாக மாறி விவசாய விரோத அரசு குமாரசாமி ஒழிக என தன் முழக்கத்தை ஆரம்பித்துவிட்டார்
குமாரசாமி ஏன் ரத்துசெய்யவில்லை என்றால் டெல்லிக்கும் அவருக்கும் கும்மாங்குத்து நடக்கும் நிலையில் நிதி சிக்கல் உருவாகும் என்கின்றார்கள்
எப்படியோ எதை தொட்டால் குமாரசாமிக்கு நெருக்கடி அதிகரிக்குமோ அதை எல்லாம் கையில் எடுக்கின்றார் எடி
எடியின் இந்த அழிச்சாட்டியத்தால் இனி காவேரி என்னாகும் என்பதுதான் சிக்கல்
நாம் கன்னட விவசாயிகளையே கேட்கலாம்
கன்னட விவசாய குடிகளே, உங்கள் அரசு விவசாய கடனை ரத்து செய்யாது, பின் ஏன் வீணாக விவசாயம் செய்து கஷ்டபட வேண்டும்?
அந்த நீரை எங்களுக்கு கொடுங்கள் நாங்கள் விவசாயம் செய்துகொள்கின்றோம்