குரங்கணி தீவிபத்து எதற்காம் தெரியுமா?
ஒரு சில குருவி மூளைகாரர்கள் இருக்கின்றார்கள், ஏதும் விபத்து நடந்தால் உடனே இது மத்திய அரசின், உளவுதுறையின் சதிதிட்டம் என கிளம்பிவிடுவது
இந்த குரங்கணி தீவிபத்து எதற்காம் தெரியுமா? அப்படியே மலையினை அரசு கட்டுபாட்டில் கொண்டுவந்து அந்த நியூட்ரினோ மையத்தை அமைப்பார்களாம்
எங்கே மல்லாக்க கிடந்து யோசிப்பார்களோ தெரியாது, இவர்களுக்கு மட்டும் இப்படி விபரீத சிந்தனைகள் வருகின்றது
ஏன் காட்டில் இதற்கு முன் தீ பிடித்ததே இல்லையா? உலகம் முழுக்க அரசுகள் தீ வைக்குமா? இதெல்லாம் இந்நேரம் கிளப்பிவிடும் சர்ச்சைகளா?
அரசுக்கு பொறுப்பு உண்டு அது இம்மாதிரி செய்யாது, ஆனால் பொறுபற்ற சிலர் இப்படி பேசிதிரிவது பெரும் கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உரியது.
இதுபற்றி ஒருவர் சீரியசாக பேசிகொண்டிருந்தார், அவரிடம் இந்த சுனாமி எல்லாம் அரசு கிளப்பியதா என்று கேட்டால், தெரியாதா? இதெல்லாம் இலுமினாட்டி சதி ஆழ்கடலில் அணுகுண்டு வெடிக்க வைத்தால் பூகம்பம் வரும் தெரியுமா?
ஏன் அமெரிக்காவில் , ரஷ்யாவில் சுனாமி வராமல் இங்கே வந்தது. அப்படி வந்தால் மக்கள் அழிவார்கள்,நோய் வரும் அதில் அவர்கள் சம்பாதிப்பார்கள் என சொல்லி மகா அதிர்ச்சியூட்டினார்
சுனாமி வர எத்தனை அணுகுண்டுகள் வெடிக்க வேண்டும் என கேட்டால் பதில் இல்லை, உலகின் மொத்த அணுகுண்டுகள் பற்றி கேட்டாலும் தெரியவில்லை
சுனாமி அணுசக்தியில் வந்திருந்தால் அதில் கதிரியக்கம் இருக்கும் என்பதும் புரியவில்லை
எது நடந்தாலும் அது அரசு சதி, இலுமினாட்டி சதி என கிளம்பவேண்டியது, இவர்கள் என்ன ரகம் என்றே தெரியவில்லை.
ஒருவேளை இவர்கள்தான் இலுமினாட்டிகள் தயாரிப்பாக இருக்கலாம், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த அவர்களால் உருவாக்கபட்ட முட்டாள்களாக இருக்கலாம்