குரு நாணக்

இன்று அந்த மகான் குருநாணக்கின் 553ம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாடபடுகின்றது, சீக்கிய சமூகத்துக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்

இந்திய வரலாற்றில் குறிப்பிடதக்க அவதாரம் குருநாணக்நிச்சயம் அந்த மனிதன் அறிவாளியும் தீர்க்க தரிசியுமாய் இருந்திருக்கின்றான், இந்தியாவின் சிக்கல் தீர அந்த பஞ்சாப் கைபர் போலனை அடுத்த லாகூர் பக்கம் ஒரு அரண் எழும்ப வேண்டும் எனும் அந்த சிந்தனைதான் பாரத விடுதலைக்கு சாத்தியமானது

அதுவரை வேலியற்றதாக இருந்த பாரதம் உஸ்பெக் ஆப்கன் என யார் யாரெல்லாமோ வந்து சுரண்டபட்டபொழுது அங்கு மனித வேலியாக எழுந்த சீக்கிய சமூகமே அந்த தொடர்பை முறியடித்தது அதன் பின்பே பாரத ஆபத்து நீங்கிற்று

அதற்கு விதையிட்டவர், அடிக்கல் இட்டவர் குருநாணக்

அவனின் காலங்கள் கடுமையானவை, அடிக்கடி மோதல்களும் இன்னபிற அட்டகாசங்களும் நடந்தவை, வளமான பஞ்சாப் ஆப்கானியரின் வேட்டைகாடாயிற்றுகோரியில் தொடங்கி, தைமூர் நாதிர்ஷா என யார் யாரெல்லாமோ வந்தார்கள் அடித்தார்கள் கடைசியில் மொகலாயரிடமும் சிக்கினார்கள்
அந்நிலையில்தான் குருநாணக் உதித்தார்.

அவர் ஒரு இந்து ரிஷியாகத்தான் திகழ்ந்தார், இந்துக்களை காக்கத்தான் தவமிருந்தார், அவர்களை காக்கத்தான் சிந்தித்தார், அல்லும் பகலும் அதையே சிந்தித்து ஒரு முனிவராக அவர் காசியில்தான் தவமிருந்தார்,

அந்த ஞானபூமிதான் தவத்தின் சீரிய சிந்தனையில் இந்த பொருத்தமான சிந்தனையினை அவருக்கு வழங்கிற்று, காசிமேல் பெரும் அன்பும் அபிமானமும் கொண்டிருந்தார் குருநாணக்

உண்மையில் அவரின் சிந்தனை இன்றும் சிலாகிக்க கூடியது, மிக தேர்ந்த சிந்தனை அது

இந்துக்களுக்கு தனி தலமை இல்லை, தனி அரசனும் இல்லை, இருக்கும் அரசர்களிடமும் ஒற்றுமையில்லை எனும் வகையில் பெரும் சிக்கல்களுக்குள் இருந்து இந்துவாக அவர் போராடவிரும்பவில்லை, இந்துக்களை ஒற்றுமைபடுத்தி போராடுவது என்பது ஆக்டோபர் தன் கரங்களை திசைக்கொரு இடத்தில் சிக்க வைப்பதற்கு சமம்

பல வகையான பிரிவுகளும் ஒவ்வொரு வகையான சிந்தனைகளும் கொண்ட இந்துமதம் மொத்தமும் திரட்டபடுவதை விட அம்மத சாயலில் ஒரு சிறியகுழு பலமான குழு எழுந்தால் போதும் அது மாபெரும் சக்தியாகும் என கணித்தார்

மொத்த இந்தியாவின் இந்துக்களையும் திரட்டி நேரத்தையும் காலத்தையும் கடத்துவதை விட ஒரு பலமான குழுவினை உருவாக்கினால் போதும் என்பது அவரின் சித்தாந்தம்

காட்டின் அனைத்து விலங்குகளையும் திரட்டி காட்டை காப்பதை விட சில சிங்கங்களை முன்னிறுத்தினால் போதும் எனும் சிந்தனை அவருக்கு வந்தது

மொத்த இந்துஸ்தானத்தையும் காக்க ஒரு அர்பணிப்பும் வீரமுமான கூட்டத்தை இந்தியாவின் தலைவாசலிலே உருவாக்க முனைந்தார், மொத்த இந்துக்களை திரட்டுவதை விட தனியே தனித்த ஒரு அடையாளத்துடன் ஒரு கூட்டத்தை உருவாக்கி காவல் வைத்தால் போதும் என்பதை கணித்தார்

பன்னெடுங்கால பாரம்பரியம் கொண்ட இந்துக்களை காக்க புதுபிக்கபட்ட பாரம்பரியத்துடன் ஒரு இந்து இனம் புதிய அடையாளத்துடன் வரட்டும் என விரும்பினார், அவர் கொடுத்த சீக்கிய அடையாளமெல்லாம் இந்துக்கள் அடையாளமே

நீண்ட கொண்டை பிரபஞ்ச சக்தியினை ஈர்க்க கூடியது என இந்துக்கள் நம்பினார்கள், பண்டை காலத்தில் அது வழமையாகவும் இருந்தது, அது தவத்தின் சாயலாகவும் இருந்தது

இந்துஸ்தான் விடுதலை அடைய தவம் செய்யும் வீர தலைமுறையினை அவர் உருவாக்கினார்

அவராலே ஆப்கானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒரு அரண் எழும்பிற்று, ஆப்கன் முதல் கல்கத்தா வரை பரவியிருந்த பேரரசை இடையில் வெட்டி சீக்கிய அரசு எழும்பிற்று பஞ்சாபினை அது காத்து நின்றது,

வெறும் விவசாய கூட்டம் போர்முறையில் அடித்து கலக்கியது எத்தனையோ ஆப்கானியரை அது ஓட விரட்டியதுகுரு கோவிந்த்சிங் போன்றவர்களை தொடர்ந்து மாமன்னன் ரஞ்சித்சிங் அதன் அசைக்கமுடியா அரசனாக இருந்தான்’

அந்த பஞ்சாப் ஒன்றுபட்டு இருந்தது லாகூர் அவர்களின் தலைநகராக இருந்தது, மொகலாயரின் பலமிக்க நகராக இருந்த லாகூரை தங்கள் தலைநகராக்கினார்கள், ஆப்கானுக்கும் டெல்லிக்கும் இடையே மிக அழகாக அரசாக எழும்பி மொகலாயத்தை துண்டாடினார்கள், அப்படியே காவல் இருந்தார்கள், ஆப்கன் ஊடுருவல் அவர்களாலே நின்றது

அப்படியே அமிர்தசரஸில் பொற்கோவில் கட்டினார்கள், குருநாணக் தன் கடைசி காலத்தை கர்தார்பூரில் கழித்தார்பிரிவினையின் பொழுது பஞ்சாப் இரண்டாக வெட்டபட்டு லாகூரும் கர்தார்பூரும் பாகிஸ்தானுக்கு சென்றதுநமக்கு அந்த சிக்கல் புரியாது

ஆனால் சீக்கியரின் வலி பெரிது இரு பக்கமும் உறவுகளும் ஆலயமும் உண்டு ஆனால் சந்திக்க விசா முதல் பயங்கர கெடுபிடிகள், அதுவும் இந்தியாவின் சந்தேக கண்ணும் பாகிஸ்தானிய சந்தேக கண்ணும் பெரும் இறுக்கம்இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் சிறுபான்மை இனமாக உள்ள அந்த இனத்தின் சோகமும் வலியும் பெரிது

அந்த குருநாணக் ஏற்படுத்திய எழுச்சியே பஞ்சாப் தனி பூமி எனும் அடையாளத்தை கொடுத்தது, அதை பாதுகாக்கும் வீரத்தை கொடுத்ததுஇன்றும் அறிவுக்கும் கடும் உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் வீரத்துக்கும் பெயர் பெற்ற இனம் அது,

சர்தாஜி ஜோக் எல்லாம் அவர்களின் பிம்பத்தை கலைக்க உருவாக்கபட்டவை அன்றி வேறல்ல‌

பிரிட்டிசார் தான் செல்லுமிடமெல்லாம் தமிழனையும் சீக்கியனையும் அழைத்து சென்றான், இரண்டும் விசுவாசமாக கடும் உழைக்கும் இனமாக அவனுக்கு தெரிந்தது

தமிழன் இன்று மாறிவிட்டான் ஆனால் சீக்கிய இனம் பெரிதும் மாறவில்லை, காரணம் தமிழன் தன் மத அடையாளத்தை வரலாறை மறந்துவிட்டான். அவனுக்கு வந்த வழியும் தெரியாது செல்லும் வழியும் தெரியவில்லை, குருடனை போல் ஆகிவிட்டான்

ஆனால் சீக்கியன் தான் ஒரு பஞ்சாபி எனும் வகையில் தன் அடையாளத்தை தொடர்ந்து பேணுகின்றான், சில மாறுதல்கள் வந்தாலும் அவனின் வேர் பஞ்சாபில் இருக்கின்றது

கனடா முதல் மலேசியா என ஏகபட்ட நாடுகளில் பெரும் வாழ்வு வாழ்கின்றனர் சீக்கியர்கள் ஆனால் மதம் வேறு வாழும் நாடு வேறு என்பதில் அவர்கள் எப்பொழுதுமே கவனமானவர்கள். 1980களில் குழப்பமான காலகட்டத்திலும் இந்தியாவோடு இருந்த சீக்கியரை மறக்கமுடியாது

இன்றும் இந்திய ராணுவத்தை தாங்குபவர்கள் அவர்களே, இந்தியாவுக்கு கோதுமை முதல் பாசுமதி வரை வழங்கும் பூமி அதுதான்

அந்த குருநாணக் வந்து பஞ்சாப் பக்கம் ஒரு புதிய சமூகத்தை தோற்றுவித்திராவிட்டால் இந்நேரம் பாகிஸ்தான் என்பது வங்கதேசம் வரை நீண்டு அமைந்திருக்கும், இந்துக்களின் காசியோ இதர நகரங்களோ பூண்டோடு அழிந்திருக்கும்

ஆம் குருநாணக் ஏற்படுத்திய அந்த வழியும் அது வழி வந்த சமூகமே பாகிஸ்தானை சியால்கோட் அப்பால் நிறுத்திற்று

நம்புகின்றீர்களோ இல்லையோ ஒரு காலத்தில் பாகிஸ்தானில் இருக்கு பஞ்சாப் நம்முடன் வரும், லாகூர் நம் வசமாகும், அந்த அதிசயத்தை சீக்கிய இனம் ஒரு நாளில் நடத்தும்

பெரும் தத்துவங்களுடனும் பசியாற்றும் கனிவுடனும் இன்னும் பெரும் பெரும் ஞானத்தினை எல்லாம் கொண்டும் எழும்பிய சீக்கிய மதத்தின் பிதாமகன் குருநாணக்கிற்கு ஞான வணக்கங்கள்

காசிமேல் பெரும் அபிமானம் கொண்ட அந்த குருநாணக்கின் வழிவந்த ரஞ்சித்சிங்தான் அகல்யாபாய் காலத்தில் காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு 100 கிலோ தங்கத்தில் கோபுரம் அமைத்தான்

சீக்கியம் இந்துமதத்தின் ஒரு பிரிவாகத்தான் அன்றும் என்றும் காணபட்டது, காங்கிரஸின் இந்திரா நல்ல இந்துவாக இருந்திருந்தால் அந்த தேவையற்ற சர்ச்சைகள் வந்திருக்காது

ஒரு இந்துவாக , இந்துஸ்தானியாக குருநாணக்கை கையெடுத்து வணங்கித்தான் தீரவேண்டும். இந்திய தேசம் இந்துதேசமாக நீடிக்க வைத்ததில் வடக்கே குருநாணக்குக்கும் தெற்கே வீரசிவாஜிக்கும் பெரும் பங்கு உண்டு

ஆம் சிவாஜி இல்லையென்றால் தென்னகம் இந்துக்களுக்கு இல்லை, அப்படியே குருநாணக் எழுந்திராவிட்டால் பாகிஸ்தான் இன்று பர்மா எல்லையினை தொட்டுகொண்டிருக்கும், வட இந்தியா என்றொரு பகுதியே இருந்திருக்காது