குறு குறு செய்திகள்…
நீட் தேர்வு சர்ச்சையில் தமிழக குரல் இன்னும் ஒலிக்கவில்லை
தமிழக அரசு ஒரு வகையில் செத்துவிட்டது, அது அப்படித்தான்.
தூக்கிபோட்டு மிதித்தாலும் அதில் ஒரு அசைவும் இருக்காது.
வெறும் பிம்பமாக அது மாறிவிட்டது,
இப்பொழுதுள்ள வகையில் ஸ்டாலினின் பெரும் போராட்டத்தை ஆதரிப்பதுதான் ஒரே வழி
கலைஞர் இல்லாத போராட்ட களங்களை திமுக சந்திக்கின்றது, எப்படி எதிர்கொள்கின்றது என பார்க்கலாம்
ஆனால் நிச்சயம் ஆதரிக்கவேண்டிய போராட்டம் அல்லாவிடில் மருத்துவபடிப்பு சாமான்யர்களுக்கு கிடைக்காமலே போய்விடும்..
ராஜாஜியினை வெற்றிகண்ட திமுக இதில் எப்படி எதிர்கொள்கிறது என்பதை கவனிப்போம்
பெரும் போராட்டவரலாறு அவர்களுடையது, இந்த தலைமுறை எப்படி என இனிதான் தெரியும்
இம்முறை சென்னை கோட்டையில் குடியரசு தின கொடியினை பன்னீர் ஏற்றுவாராம்.
கணக்கினை சரி செய்கின்றது மத்திய அரசு….
அறிவித்துவிட்டார்கள், இல்லை என்றால் சசிகலா ஏற்றும் காட்சியும் நடக்கும்.
எந்த விசாரணைக்கு எல்லாமோ உத்தரவிடுகின்றது
ஒரு முனையில் சசிகலா பாய்ந்தால் 4 முனையில் மத்திய அரசு பாய்கின்றது
ஆட்டம் விறுவிறுப்பாக செல்கின்றது, சசிகலா பின் தங்கும் நேரமிது
ஒரு தமிழனை முதல்வராக வைத்த பின்னரும் கடிதம் எழுதுவதா? என்ன அவமானம் இது?
தமிழரல்லா முதல்வர்களுக்கு தமிழகம் மீது அக்கறை இல்லை, எழுதிகொண்டே இருந்தார்கள். தமிழ் முதல்வர் அப்படி செய்யலாமா?
கூடவே சசிகலா எனும் தமிழச்சியும் பிரதமருக்கு கடிதம் எழுதிகொண்டே இருக்கின்றாராம்
இப்பொழுது அதிமுகவில் நடப்பது பிரதமருக்கு யார் அதிகம் கடிதம் எழுதுகின்றார்கள் எனும் போட்டி
பன்னீர் செல்வம் அதில் முந்திகொண்டிருக்கின்றார்.
தமிழ் முதல்வரும் கடிதம் எழுதினால் என்ன செய்ய?
இனி அமெரிக்க முதல்வராகவோ, சீன முதல்வராகவோ இல்லை என்றால் சிங்கள முதல்வராக வைத்துவிடவேண்டியதுதான்