குலகல்வின்னா என்னடா?

Image may contain: 1 person, textஅண்ணே ராஜாஜி பற்றி, அவரோட குலக்கல்வி பற்றி உங்களுக்கு தெரியாது

அப்படியா

குலகல்வின்னா என்னடா?

அப்பன் வேலைய மகனே செய்யணும், அப்படி விவசாயி மகன் விவசாயி, கூலிக்காரன் மகன் கூலிக்காரன், நெசவாளி மகன் நெசவாளின்னு அவர் செய்ய சொன்னார், ஆரிய சூது பிடிச்சவர்ணே அந்த ஆளு

ஏண்டா பள்ளிகூடம் போக மீதி நேரம்தான செய்ய சொன்னார், இப்போ வரைக்கும் விவசாயி வீட்டு பிள்ளைகள் அப்படித்தானடா வேலை செஞ்சிட்டு இருக்காங்க‌

இல்லண்ணே, அது ஆரிய சூது அப்பன் வேலைய மகன் செய்யணும்ங்குற ஆரிய தந்திரம், பெரியார்தான் அதை முறியடிச்சாரு

ஒஹோ

ஆமாண்ணே இல்லண்ணா எல்லோரும் அப்பன் வேலையத்தான் செஞ்சிட்டு இருப்போம், இது தெரியாம நீங்க அவனுகளுக்கு முட்டு கொடுக்கிறீங்க‌

அப்படியா

ஆமாண்ணே அப்பா வேலையின மகன் செஞ்சா எப்படிண்ணே? பெரியார் திமுக எல்லாம் அதை போராடி மாத்திட்டாங்க, புரட்சிண்ணே

சரி கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் கட்சி தலைவர் ஆனது, அதாவது அப்பன் வேலையினை மகன் செய்றது குலகல்வி இல்லையா? இதில் கனிமொழி வேற‌

அண்ணே அது வேற‌

என்னடா வேற, பெரியார் அறக்கட்டளைக்கு வீரமணிக்கு பிறகு அவர் மகன் வந்தது எப்படிடா?

அண்ணே அது வேற , குலகல்வி வேற‌

என்னடா வேற, திமுகவிலும் திகவிலும் மட்டும் அப்பன் வேலை மகனுக்கு, ஆனா வேற யார் செஞ்சாலும் சமூக நீதிக்கு ஆபத்து அப்படித்தான?

அண்ணே நீங்க ஆரிய அடிவருடி, சங்கி கும்பல்