குல்பூஷன் விவகாரத்தில் நல்ல முடிவு வர பிரார்த்திப்போம்
ஒரு உருக்கமான செய்தி சுற்றி வருவதை கவனித்திருப்பீர்கள், பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் குல்பூஷனை சந்திக்க அவர் தாய்க்கும் மனைவிக்கும் பாகிஸ்தான் அனுமதி கொடுத்திருக்கின்றது
இந்த உலகிலே மோசமான, அறவே பாதுகாப்பில்லா அரசு தொழில் உண்டென்றால் உளவுதுறை. ஆனால் அது இல்லை என்றால் பாதுகாப்பு இல்லை என்றால் வள்ளுவரே சொல்லியிருக்கின்றார்
இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் யார் உண்மையான உளவாளி, யார் தவறாக கைதுசெய்யபட்டார் என சொல்ல முடியாது. சிக்கும் வரை சிக்கல் இல்லை சிக்கிவிட்டால் அவரை காப்பாற்ற அரசுகள் அவர் ஆம் உளவாளி என்றோ அவர் நிரபராதி என்றோ சொல்லவே சொல்லாது
இதற்கு எந்த நாடும் விதிவிலக்கு அல்ல, அமெரிக்க உளவாளிகள் என்ற பெயரில் பலர் உலகெல்லாம் சிக்குவதும், இன்னும் ஏராளமான சர்சைகளும் வரும் உலகிது
அமெரிக்க, இஸ்ரேலிய உளவுதுறையினைரே தங்கள் உளவுதுறையினர் சிக்கிகொண்டால் கண்டும் காணாமல் இருந்துகொள்ள்ளும், அந்த தொழில் இல்லை இல்லை அந்த தேச சேவை அவ்வளவு கடுமையானது, மரணத்தை அனுதினமும் எதிர்பார்க்கும் சேவை அது.
சிக்கியவர்கள் பாடு அவ்வளவுதான், அவர்கள் உண்மை உளவாளியோ இல்லை தவறாக கைது செய்யபட்டவர்களோ தண்டனை மரணம் வரை சித்திரவதைதான்
இந்த குல்பூஷ்ன் எனும் கடற்படை அதிகாரியும் பாகிஸ்தானில் அப்படி சிக்கிவிட்டார், அவர் இந்திய உளவாளி என சொல்லி பாகிஸ்தான் மரண தண்டனை விதித்தது , இந்தியா அவரை விடுவிக்க சொல்லி வலியுறுத்தியது
குல்பூஷன் மீது தவறு இல்லை என இந்தியா சொன்ன பல விஷயங்கள் பாகிஸ்தான் காதில் ஏறவே இல்லை. உண்மையில் குல்பூஷன் கைது செய்யபட்டவிதமே சர்ச்சைகுரியது.
பெரும் சிக்கலான விஷயமாக உருவெடுத்தது,
இந்நிலையில் குல்பூஷனின் தாயும், மனைவியும் அவரை காண பாகிஸ்தான் விசா வழங்கியிருக்கின்றது, இது என்ன மாதிரி நகர்வு? பாகிஸ்தானியர் யாரும் இங்கு சிக்கிவிட்டார்களா? என இனிதான் தெரியும்
அந்த குல்பூஷன் நிரபராதியா இல்லை சந்தேகத்திற்குரியவரா என்பது வேறு விஷயம், ஆனால் இந்தியன் என்ற ஒரே காரணத்திற்காக மரணத்தின் விளிம்பில் அங்கு நிற்கின்றார்
அந்த இந்தியனுக்கு ஆதரவாக இத்தேசம் என்றும் குரல்கொடுத்துகொண்டே இருக்கும்
இன்று குடும்பத்தார் சந்திக்க அனுமதித்திருக்கும் பாகிஸ்தான் அவரின் மரண தண்டையினை ரத்து செய்து இத்தேசம் திரும்ப அனுமதிக்கும் என எதிர்பார்ப்போம்
இந்தியன் என்பதற்காய் மரணவாசலில் நிற்கும் அந்த மாவீரனை காண சென்று கண்ணீர் வடிக்கும் அந்த குடும்பத்திற்கு ஆதவாக இத்தேசம் கண்ணீர் வடிக்கின்றது
நாட்டுபற்றுள்ளோர் இந்த விவகாரத்தில் அந்த குடுபத்திற்கு துணை நிற்கின்றார்கள், அந்த சகோதரனின் குடும்பத்திற்கு ஆறுதலாய் நிற்கின்றார்கள்
நியாயம் வெல்லட்டும், குல்பூஷன் விவகாரத்தில் நல்ல முடிவு வேண்டும் என இத்தேசம் பிரார்த்திக்கின்றது
வந்தே மாதரம்