குழந்தை பெத்துக்கிட்டா கவர்ச்சியா ஆடக்கூடாதா : நடிகை கஸ்தூரி ஆதங்கம்
குழந்தை பெத்துக்கிட்டா கவர்ச்சியா ஆடக்கூடாதா : நடிகை கஸ்தூரி ஆதங்கம்
எந்த நாய் உங்களை கவர்ச்சியாய் ஆடகூடாது என சொல்லிற்று? அவனை வன்மையாக கண்டிக்கின்றோம்
முடிந்தால் அவனை கம்பத்தில் கட்டி தோலை உரிக்கவும் செய்கின்றோம், எவ்வளவு பெரிய அயோக்கியவன் அவன்??
நீங்கள் கவர்ச்சியாக ஆடிகொண்டே இருங்கள், பார்க்க தமிழ் கூறும் நல்உலகம் எப்பொழுதும் தயாராக இருக்கின்றது
உங்கள் கவர்ச்சி கலைச்சேவை எந்நாளும் தேவை…
தயவு செய்து மனம் தளர்ந்துவிடாதீர்கள்..
காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டும் : கமல்
இவரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்ளே தள்ள வேண்டும்
40 ஆண்டுகால சிக்கலுக்கு நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன பின்னும் இவர் இப்படி நீதிமன்ற தீர்ப்பை அவமதித்து சொல்லிகொண்டிருந்தால் அதனைத்தான் செய்ய வேண்டும்
இவர் வைத்திருப்பது மய்யம் அல்ல, பொய்யம்
அதாவது அன்னார் தென்கொரியா சென்றபொழுது பிலிப்பைன்ஸ் மக்களின் மாநாட்டில் மேடைக்கு வந்த பெண்ணிடம் இப்படி மரியாதை காட்டி இருக்கின்றார்
விஷயம் சர்ச்சையாகின்றது, பலர் கண்டிக்க அவரோ என்ன குற்றம் கண்டீர் என்பது போல பேசிகொண்டிருக்கின்றார்
தமிழகத்து மய்யம் ஒருவேளை ஆட்சிக்கு வந்தால் இங்கும் இதுதான் நடக்கும் எனும்பொழுதே பகீர் என்கின்றது மனது.
சென்னையில் வாலிபர் கழுத்தறுத்து கொல்லபட்டிருக்கின்றார், விவகாரத்தை தோண்டினால் பெரும் அருவெருப்பான சமாச்சாரங்கள் வருகின்றன
பெண் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்களின் தொடர்ச்சியாக இந்த மன நல சிக்கல்களின் உறவுகளும் வருகின்றன
அந்த சிக்கலில் ஒருவனை கொன்றே போட்டிருக்கின்றார்கள்
பாலியல் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் இனி இந்தியாவில் இளைய சமுதாயத்தை காப்பாற்ற வழியில்லை என்பதை நடக்கும் விஷயங்கள் சொல்கின்றன