குஷ்புவிற்கு முன் குஷ்புவிற்கு பின்
கிறிஸ்துவிற்கு முன் கிறிஸ்துவிற்கு பின் என்பது இனி பொதுயுகத்திற்கு முன் பொதுயுகத்திற்கு என்றே அழைக்கபடும் என தமிழக அரசு உத்தரவிட்டு பாடபுத்தகங்களிலும் வந்தாயிற்றாம்
பொதுயுகத்திற்கு என்ன அளவு என கேட்டால் இயேசு பிறப்பதற்கு முன் இருந்த காலம், பின் இருந்த காலம் தமிழக அமைச்சர் சொல்லியிருப்பார்,
ஆனால் யாரும் கேட்க வில்லை
பொதுயுகத்தின் அளவே இயேசுபிறப்பை வைத்து என உலகம் பின்பற்றும்பொழுது இவர்களுக்கு தனி வழி
நல்ல வேளையாக ராமருக்கு முன், ராமருக்கு பின் ரா.மு ரா.பி என பாஜக இறங்காதவரை நல்லது
தமிழக அரசும் ஜெயலலிதாவிற்கு முன் ஜெயலலிதாவிற்கு பின் என்றோ (ஜெ.மு, ஜெ.பி), சசிகலாவிற்கு முன் சசிகலாவிற்கு பின் (ச.மு , ச.பி) என்றோ மாறவில்லை அதுவரை நல்லது
யார் எப்படி அழைத்தாலும் உலகம் இன்னும் கொஞ்ச காலத்தில் வரலாற்றை இப்படி பிரிப்பது உறுதி
அதாவது குஷ்புவிற்கு முன் குஷ்புவிற்கு பின் என உலகம் ஒரு கணக்கீட்டை பின்பற்றியே தீரும்
அப்படி உலகின் மிகபெரும் வரலாற்று நாயகியாவார் தலைவி என்பதை சங்கம் சொல்லிகொள்கின்றது
வானில் இரட்டை நிலவு ஒரு நாளில் தோன்றும் என அன்றே தீர்க்கதரிசிகள் சொல்லியிருக்கின்றார்கள
இதோ நிறைவேறிற்று…