குஷ்புவே நமஹ !
டி.ஆரை பற்றி என்றோ எழுதியதில் Anthanan Shanmugam நண்பரனார், தமிழ் திரையுலகின் மிக முக்கியமான வலை தளத்தை நடத்திகொண்டிருப்பவர்
மிக மிக ரசனையான, போரடிக்காத, குபீர் சிரிப்புகளுக்கு சொந்தக்காரர் அவர், ஆனால் சினிமா பற்றி மட்டும்தான் எழுதுவார்,அப்படி ஏதோ கோவிலில் சத்தியம் செய்திருக்கின்றார், மீறவே மாட்டார்
சினிமா செய்திகளுக்கு நேர்ந்துவிடபட்ட ஆசாமி, இவர் அரசியல் பதிவுகள் எழுதாதவரை சோ ராமசாமியின் நாற்காலிக்கு ஆபத்தில்லை, அப்பக்கம் வந்துவிட்டால் அடுத்த சோ ராமசாமி ரெடி, அரசியல் கட்சிகளுக்கு பெரும் சவால்
நல்ல வேளையாக அரசியல் களம் தப்பித்துகொண்டிருக்கின்றது
நமது பதிவுகளை கவனித்தார், குவலயத்தின் எல்லா விஷயங்களையும் எழுத முனைகின்றீர், எங்கே குஷ்பூ பற்றி எழுதினால் எப்படி எழுதுவீர்கள் என்றார்
குவலயத்து சூரியனே குஷ்பூதானே, வாசிக்க ஆரம்பித்த நாட்களில் குஷ்பூ பற்றியே செய்திகளை வாசித்தே தான வளர்ந்தோம், அவரை பற்றி எழுத சொன்னால் இப்படித்தான் எழுதுவேன் என சில வரிகளை எழுதிய பின் ஓஓ அப்படியா என்றார்
குஷ்பூ பற்றி பத்திரிகை செய்திகளை தவிர ஏதும் தெரியாது, அவரை பற்றிய புத்தகமோ அல்லை அவரே எழுதிய சுயசரிதையோ , சொந்த வாழ்வு பேட்டியோ எதுவுமில்லை
ரசித்த விஷயங்களை மட்டும் எழுதிதருகின்றேன், இவ்வளவுதான் என எழுதினேன்
மனிதர் தொடராக்கிவிட்டார்
இந்த டைட்டில் எல்லாம் அவரின் கைவண்ணம், இன்னும் என்னென்ன கலவை எல்லாம் செய்திருக்கின்றாரோ தெரியாது
நமக்கும் எங்கும் எதுவும் பத்திரிகைக்கோ, புத்தகமாகவோ எழுதிய அனுபவம் சுத்தமாக இல்லை, அந்த திட்டமும் இல்லை
தேரினை இழுத்து தெருவில் விட போகின்றீர்களா என்றேன்? இல்லை இல்லை தெய்வத்தின் தேரினை உங்களோடு இழுக்க போகின்றேன், வாருங்கள் இழுப்போம் என்றார்
எங்கோ உதைக்கின்றது அல்லவா?
அதே தான் தலைமறைவாவதற்கு சகல முன்னேற்பாடுகளையும் மிக அவசரமாக செய்து கொண்டிருக்கின்றேன்..
ஒரு ரசிகனா இருப்பது பெரும் குற்றமா அய்யா?