குஷ்பு திட்டியது யாரை?

Image may contain: text

தலைவி குஷ்புவிடம் எவனோ டிவிட்டரில் வம்பிழுத்தானாம், தலைவி பொங்கி எழுந்து போடா பன்றி மூஞ்சி என வசமாக திட்டி அனுப்பிவிட்டார்

அவனை தேடி கண்டுபிடித்து 4 போடு போட்டு தலைவி செருப்பு முன்னால் மன்னிப்பு கேட்க வைக்க சங்கம் தீவிரமாக இறங்கிவிட்டது

தலைவியினை சீண்டிய அவனை சும்மா விட கூடாது, தைரியமாக கொலை அல்ல கொலைமுயற்சி செய்யலாம்

ஆம் இப்பொழுதெல்லாம் கொலைமுயற்சி வழக்கு பாய்ந்தாலும் கைது செய்ய மாட்டேன் என்கின்றது காவல்துறை

ஆக இந்த லும்பனை அடித்து சாத்திவிட்டு நாமும் மண்டபத்தில் சென்று அமரவேண்டியதுதான், கோடான கோடி ரசிக கண்மணிகள் வந்து சூழ்ந்து நின்றால் காவல்துறை என்ன செய்யும்

வழக்கு பதிந்துவிட்டு அதன்போக்கில் செல்லும்

தமிழக நிலமை இப்படி ஆகிவிட்டதால் தைரியமாக தலைவியிடம் வம்பிழுத்தவன் மேல் கொலை முயற்சி செய்ய சங்கம் முடிவுசெய்துவிட்டது

எப்படி பிடிப்பார்கள் பார்க்கலாம்?

காவலரையே கொல்ல முயன்ற சைமனை கைது செய்யாத பொழுது, ஒரு அற்ப பதரை முதுகில் சாத்தியதற்கா நம்மை கைது செய்ய முடியும்?

அதுவும் மாபெரும் சங்கம் இருக்கும்பொழுது

ஏ அற்ப பதரே, ஒழுங்காக தலைவி செருப்பிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு போ, இல்லை என்றால் கொலை உட்பட பல முயற்சி வழக்குகளை எதிர்கொள்ள சங்கம் தயாராகின்றது

இதற்கு வழிகாட்டிய அங்கிள் சைமனுக்கும், அவரை கைது செய்யாமல் விட்ட காவல்துறைக்கும் சங்கம் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது