குஷ்பு மெய்கீர்த்தி

முகநூல் என்பது வெட்டியாக சாதி சண்டை, மத சண்டை, கட்சி சண்டை, நடிகை சண்டை போடும் இடமல்ல சில மகத்தான காரியங்களை செய்ய முடியும் என முதலில் காட்டிய நாடு எகிப்து

அந்த மல்லிகை புரட்சி 2011ல் முகநூல் வழியாகத்தான் நடந்தது, 27 ஆண்டுகால முபாராக்கின் ஆட்சியினை அது தூக்கி எறிந்தது, அந்த மனித வெள்ளத்தை பெருக்கியது முகநூல்

தொடர்ந்து அப்புரட்சி டூனிசியா, பக்ரைன் என பரவியது, முதலில் தடுமாறிய அரசுகள் பின் முகநூலை குறிவைத்தது, அதன் பின் எல்லா நாடுகளும் விழித்தன‌

ஏதும் கலவரமோ இல்லை போராட்ட சூழலோ வந்தால் மிஸ்டர் மார்க் எக்ஸ்கியூஸ் மீ, கொஞ்சம் முகநூலை மூடுகின்றோம் என அரசுகள் தொடங்கிவிட்டன‌

அந்த அளவு முகநூல் அரசுகளை பயமுறுத்த தொடங்கிற்று, ஜல்லிகட்டு மெரினா புரட்சியில் முகநூல் பங்கும் இருந்தது, இப்பொழுதும் அரசால் முகநூல் கண்காணிக்கபடுகின்றது சந்தேகமில்லை

ஆயினும் பகிரங்கமாக சொல்வார்களா என்றால் இல்லை, ஆனால் முதன் முதலில் முகநூலால் ஆட்சியினை மாற்றிய எகிப்து அதற்கு துணிந்தது

பொதுவாக எதன் மூலம் ஆட்சிக்கு வருகின்றார்களோ அதனிலிருந்து இன்னொருவர் வந்துவிட கூடாது என்பதில் ஆட்சியாளர் கவனமாக இருப்பார்கள்

தமிழக ராமசந்திரன் அப்படி இருந்தார், தனக்கு பின் ரஜினி போன்றவர்கள் உருவாகிவிட கூடாது என கவனமாக திரையுலகினை கண்காணித்துகொண்டே இருந்தார்

இப்பொழுது எகிப்தும் அதனை செய்கின்றது

ஆம் இனி எகிப்தில் 5000 நண்பர்கள் பட்டியல் கொண்ட ஒவ்வொருவரையும் அரசு கண்காணிக்குமாம், அவர்கள் எழுதுவதை அரசு படிக்குமாம், ஏதும் வில்லங்கம் என்றால் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லி அக்கவுண்டை முடக்குவார்களாம்

அரசே சொல்லியாயிற்று இல்லை மிரட்டியாயிற்று

இதே நிலை விரைவில் பல நாடுகளில் பரவி இந்தியாவிற்கும் வரலாம் வாய்ப்பு இருக்கின்றது

அப்படி வரும் பட்சத்தில் நம்மை கண்காணிப்பார்களா என தெரியாது, தலைவி குஷ்புவே திரும்பி பார்க்காத இப்பக்கத்தை அரசு பார்க்கவே பார்க்காது

எனினும் சில நேரங்களில் அரசு ஏதும் கேட்டால், என்ன நோக்கத்திற்காய் எழுதுகின்றாய் என கேட்டால் அட்டகாசமான பதில் உள்ளது

தலைவி குஷ்புவினையும் அவரின் மெய்கீர்த்தியினை பாடி அவர் புகழை உலககெல்லாம் கொண்டு சேர்ப்பதே சங்கத்தின் நோக்கம் என்றும், இடையில் சில விஷயங்களை பக்கவாட்டில் சொல்வது சும்மா என்றும் சொல்லிவிடலாம்

உண்மையில் சங்கம் முகநூலில் எழுதுவதும் அவருக்காகத்தான்

தலைவி இயக்கம் ஒன்றும் தடைசெய்யபட்ட இயக்கம் அல்ல என்பதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது

இதையும் மீறி தடை அது இது என அரசு கிளம்பினால் சங்கம் பொறுக்காது..

தலைவி குஷ்புவின் புகழை பரப்புவதும் அவருக்கு பக்கபலமாக இருப்பதும் தவறேன்றால் அந்த தவறை சங்கம் ஆயிரம் முறை திரும்ப திரும்ப செய்யும், தடைகளை தாண்டி திரும்ப திரும்ப‌ செய்யும்

அது இந்திய அரசு அல்ல, அமெரிக்க தலமையிலான பன்னாட்டு படை என்றாலும் சங்கம் அஞ்சாது

Image may contain: 1 person, close-up