குஷ்பூவிடம் இருந்து அதிரடி பதில்
இலங்கை போரின்பொழுது ராகுல் என்ன செய்தார் என திடீர் கேள்வி எழுப்பினார் தமிழிசை
இது என்ன மெர்சல் பற்றி பேசும்பொழுது இந்தம்மா இலங்கைக்கு தாவுகின்றதே என எல்லா காங்கிரசாரும் யோசிக்க, குஷ்பூவிடம் இருந்து அதிரடி பதில் வந்திருக்கின்றது
ஏம்மா தமிழிசை, சினிமாவில் வரும் 2 நிமிட வசனத்திற்கு உங்களால் தாங்கமுடியவில்லையா, உங்கள் ஆட்சி மீது இவ்வளவுதான் நம்பிக்கையா?
தமிழக பிரச்சினை இப்பொழுது டெங்கு, அந்த அரசோ மோடியின் கைபிள்ளை நாங்கள் என சொல்கின்றது, தமிழக அரசால் தம்பிடி பிரயோசனமில்லை, தமிழகம் தவிக்கின்றது அதனை பற்றி சொல்லுங்கள்
கந்துவட்டி கொடுஞ்சாவுகள் பற்றி பேசாமல், சினிமாவினை பற்றி பேசுவதுதான் உங்கள் அரசியலா?
மெர்சலுக்கு அனுமதி கொடுத்த தனிக்கை அலுவகம் சென்று ஏதாவது சொன்னீர்களா?
விமர்சனங்களை தாங்கமுடியாமல் நீங்கள் என்ன அரசியல்வாதி? ஒபாமா சொன்னதை படியுங்கள்” என சீறியிருக்கின்றார் குஷ்பூ
தமிழிசை பாவம், அவர் மோடி, காவி, கோட்டை, மெர்சல் தவிர என்ன கண்டார், ஒபாமா என சொன்னதை கேட்டு ஓ அப்பா, அம்மாவா? என்ன சொன்னார்கள் என போன்போட்டு விசாரிக்கலாம்
காங்கிரஸ் என்பது ஒரு மாதிரியானவர்களின் கூடாரம், அங்கிருந்து இளங்கோவனின் குரல் மட்டுமே அதிரடியாக வரும், வேறு எவரும் பேசமாட்டார்கள்
அதுவும் டெல்லியிடம் கேட்டுவிட்டுத்தான் மூச்சே விடுவார்கள்
ஆனால் அதிரடியாக காங்கிரஸ் சார்பாக பேசி அசத்தியிருக்கின்றார் தலைவி
எப்படியோ குஷ்பூ Vs தமிழிசை அடுத்த இன்னிங்க்ஸ் ஆரம்பித்தாயிற்று
இனி தமிழிசை பதில் எப்படி வரும் தெரியுமா?
இந்தியா சீனா சண்டை நடக்கும்பொழுது குஷ்பூ எங்கே சென்றார்?
குஷ்பூ அப்பொழுது பிறக்கவேயில்லை என்பதை பற்றியெல்லாம் தமிழிசைக்கு என்ன கவலை?