குஷ்பூ ஆர்மி சும்மா விடாது
கராத்தே தியாகராஜன் என்றொருவர் முன்பு காங்கிரசில் இருந்தார், இப்பொழுதும் இருக்கின்றார்
ஆனால் அப்படி ஒரு ஜீவன் நடமாடிகொண்டிருப்பதே பலருக்கு தெரியாது, மனிதருக்கு காங்கிரசில் தானும் உண்டு என சிலருக்கு சொல்ல ஆசை
ஒவ்வொருவரிடமாக நானும் காங்கிரஸ்காரன் என சொல்லிபார்த்தார், எல்லோரும் போப்பா என விரட்டினார்கள்
அவருக்கு அபார திட்டம் உதித்திற்று, அது தமிழக காங்கிரசின் பழக்கமும் கூட
யாரிடமாவது கட்சிக்குள் வம்பிழுத்து தான் இருப்பதை காட்டிகொள்வது அந்த வழக்கம்
தன் திட்டத்தை செயல்படுத்தினார் தியாகராஜன், கட்சி கூட்டத்தில் குஷ்பூவிடம் உங்கள் உறுப்பினர் கார்டை காட்டுங்கள் என வாட்ச்மேன் போல வம்பிழுத்திருக்கின்றார்
குஷ்பூவினை அண்ணன் எதிர்த்துவிட்டார் என அவரின் சில அடிபொடிகள் கிளப்பிவிட சர்ச்சை வந்திருக்கின்றது
அந்த கட்சியின் தமிழக பிரிவின் பிராதன தலைவர் குஷ்பூ
அவரிடம் இருக்கவேண்டியது கட்சி தலைவர்களுக்கான கார்டு
அதாவது ஏகபட்ட தலைவர்கள் உள்ள அக்கட்சியில் குஷ்பூவும் ஒரு தலைவி, அந்த கார்டுதான் இருக்கவேண்டும்
அவரிடம் போய் உறுப்பினர் கார்டு என காமெடி செய்திருக்கின்றார் தியாக ராஜன்
அந்த கட்சி இருப்பதே குஷ்பூ தயவில் என்பதை மறந்துவிட்டு சில காமெடி காட்சிகளை செய்த தியாகராஜனை சங்கம் காமெடியாக பார்க்கின்றது
இன்னொருமுறை இப்படி அவர் கட்சியில் குழப்பம் விளைவிக்கும் விதமாக பேசினால், சங்கம் சும்மா விடாது
அவர் கராத்தே தியாகராஜனோ இல்லை கத்திசண்டை தியாகராஜனோ, குஷ்பூ ஆர்மி சும்மா விடாது.
அதிமுகவில் முன்பு கராத்தே உசைனி என்பவர் இருந்தார், ஜெயா காலத்திற்கு பின்பு அவரை காணவில்லை, அந்த காமெடியினை இந்த கராத்தே தியாகராஜன் செய்கின்றார்.
இந்த சங்கி மங்கிகள் எல்லாம் அப்படித்தான்.
மிஸ்டர் தியாகராஜன்
அதிமுக, பாஜக எல்லாம் சுற்றிய திருநாவுக்கரசர் தமிழக காங்கிரஸ் தலைவராகும்பொழுது, திமுகவில் இருந்து பிரிந்த தலைவி குஷ்பூ காங்கிரஸ் பதவிக்கு வர கூடாதா?
குஷ்பூவினையும் விட்டுவிட்டால் காங்கிரசுக்கு எதிர்காலம் இல்லை என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்