குஷ்பூ பாஸ்போர்ட் என்றால் மட்டும் சிக்கலா?
இந்த தேசத்தில் விஜய் மல்லையா வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் கொடுக்கபடும், லலித் மோடிக்கு கொடுக்கபடும்
மர்ம சாமியார் சந்திராசாமி எனும் ஆசாமிக்கு பாஸ்போர்ட் கொடுக்கபடும்
வழக்கு இருந்தாலும் கனிமொழி வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வழங்கபடும்
சர்ச்சைகுரிய சசிதரூர் போன்றவர்கள் எங்கும் செல்ல பாஸ்போர்ட் கொடுக்கபடும்.
இன்னும் பல சர்ச்சைகுரியவர்கள் எல்லாம் பாஸ்போர்ட் பெற்று சென்றுகொண்டே இருப்பார்கள்,
பலர் திரும்ப வரவே மாட்டார்கள், ஆனாலும் பாஸ்போர்ட் முடக்கபடாது
ஆனால் குஷ்பூ பாஸ்போர்ட் என்றால் மட்டும் சிக்கல் கொடுக்கின்றார்கள், கேட்டால் 2 மாதமாக அலைகழிபார்களாம்
குஷ்பூ மிக நியாயமாக நீதிமன்ற கதவுகளை தட்டியிருக்கின்றார், அவர்களும் பாஸ்போர்ட் கொடுக்க வழி செய்திருக்கின்றார்கள்
கோடிகணக்கான ரசிக கண்மணிகளை கொண்டிருக்கும் ஒரு பெரும் இயக்கத்தின் தலைவியான அவருக்கு இழைக்கபட்டிருக்கும் இந்த அநீதி சாதரண விஷயம் அல்ல
பெரும் கொள்ளைக்காரனுக்கும், கொலைக்காரனுக்கும் பாஸ்போர்ட் கொடுக்கும் நாட்டில் வேண்டுமென்றே குஷ்பூ பழிவாங்கபடுகின்றார்
வெகுவிரைவில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கபடும் என நீதிமன்றத்தில் உறுதி செய்யபட்டிருப்பதால் அவரின் ரசிகர்கள் அமைதி காக்கின்றார்கள்.
விரைவில் அவருக்கு பாஸ்போர்ட் கிடைக்கட்டும், கூடவே நீதியும் கிடைக்கட்டும்.
எல்லோருக்கும் ஒரு காலம் வரும், அது குஷ்பூவிற்கு சீக்கிரமே வரும்
அடுத்த தேர்தலில் அவர் மத்திய அமைச்சராவர், இன்று தெரியும்
இது என்ன பாஸ்போர்ட்?
அவர் “டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்” வாங்கி இவர்கள் முகத்தில் கரிபூசும் நாள் தொலைவில் இல்லை