குஷ்பூ ரசிகர்களின் ஆறுதல்.
கலைஞரும் சோ ராமசாமியும் கொடுத்து வைத்தவர்கள். இருவரும் இருந்திருந்தால் முரசொலி விழா இப்படி நடந்திருக்காது
சோ ராமசாமியினை பேசவைத்துவிட்டு மனதிற்குள் ரசித்துகொண்டிருப்பார் கலைஞர், சோ பேசியிருந்தால் நிச்சயம் எமர்ஜென்சி காலத்தில் துக்ளக்கும், முரசொலியும் பட்டபாடுகளை நினைவு கூர்ந்திருப்பார்.
சந்தடி சாக்கில் கலைஞரும் “இப்பொழுதும் எமர்ஜென்சிதாய்யா, வாய்யா எழுதுவோம்..” என்றால் அரங்கம் அதிர்ந்திருக்கும்.
தன் காலத்தில் யார் யார் எதிரியோ? எல்லோரையும் பத்திரிகையாளன் என்ற முறையில் அழைத்து பேசவைத்து பார்த்திருப்பார் கலைஞர்.
அப்படி எல்லாம் அழைக்கவேண்டியவர்களை அழைக்காமல், யாரையெல்லாமோ அழைத்திருக்கின்றார்கள்
முரசொலி பவள விழா நடந்ததாம், பார்ப்பன கரங்களில் முழுமையாக சிக்கியிருக்கும் ரஜினியினை அழைத்திருக்கின்றார்கள். பேச்சும் நடவடிக்கையும் அறவே புரியாத கமலஹாசனை அழைத்திருக்கின்றார்கள்
காங்கிரசிலும் சில தலைகள் தென்பட்டிருக்கின்றன.
ஆனால் குஷ்பூவினை அழைக்கவில்லை, இது ஒருவகையில் திட்டமிட்ட சதி. ரஜினி திமுகவிற்கு கிழித்ததை விட குஷ்பூவின் முன்னாளைய உழைப்பு ஒன்றும் குறைந்ததல்ல
ஆனாலும் உதயநிதி ஸ்டாலின் தலைவராக அமர்ந்திருந்த மேடையில் குஷ்பூ வராமல் போனது அவரின் கவுரவத்திற்கு நல்லது என்பதுதான் குஷ்பூ ரசிகர்களின் ஆறுதல்.