கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வி

கூடங்குள அணுவுலை குறித்து மிக நல்ல கேள்வியினை கேட்டிருக்கின்றார் நெல்லை எம்பி ஞானதிரவியம்

அணுவுலை கழிவு மற்றும் இதர சிக்கல்கள் பற்றி கேட்டிருக்கின்றா, அமைச்சரும் அணுவுலை கழிவு பாதுகாப்பாக புதைக்கபடுகின்றது, 40 வருடம் கழித்து மறுசுழற்சி செய்வோம் என பேசியிருகின்றார்

அத்தோடு திருப்தியாய் அமர்ந்துவிட்டார் எம்பி

இது தொழில்நுட்ப ரீதியாக அமைச்சர் கோட்டைவிட்ட விஷயம், அணுவுலை மற்றும் தத்துவபடி 40 ஆண்டு கழித்து அதை திறந்து மறுசுழற்சி எல்லாம் வாய்ப்பே இல்லை

அணுவுலை பற்றி அடிப்படை அறிவு கூட இல்லாதவரா அமைச்சர் என பெரும் சிக்கலை திமுக எழுப்பியிருக்கலாம், அமைச்சரை திணறடித்திருக்கலாம்

ஆனால் ” 40 வருடமா? அப்பொழுது எவன் எம்பியாக இருந்தால் எனக்கென்ன? 3 வருடத்தில் தோண்ட மாட்டீர்கள் அல்லவா அதுபோதும் ..” என்ற திருப்தியுடன்
எம்.பி அமர்ந்துவிட்டார்

விஷயம் இதைத்தான் சொல்கின்றது

தகுந்த தரவுகளுடன் மிக துல்லிய முன் தயாரிப்புடன் அணுவுலை பற்றிய ஓரளவு ஞானத்தோடு சென்றிருந்தால் இன்று ஞானதிரவியத்தை உலகமே பார்க்கும்

அவ்வளவு அழகான வாய்ப்பு இது

ஆனால் இப்பொழுது அவரை பார்த்து சர்வாதிகாரி மட்டும் சுறா படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியினை வடிவேலு பார்த்து கையசைப்பதை போல அசைத்துகொண்டிருக்கின்றார்