கூத்தாடி பசங்க…
நடிகர் , நடிகையர் கலைஞர்கள், கலையுலகமெல்லாம் கருணாநிதி அரசியலுக்கு வந்து கொடுத்த பெயர்கள் பட்டங்கள். அதற்கு முன்பு அவர்கள் பெயர் கூத்தாடிகள் அதுவும் அதற்கு முந்தைய காலத்தில் சபையில் சொல்லமுடியா பட்டங்களெல்லாம் இருந்தன
அப்படிபட்ட கூட்டமெல்லாம் இன்று ஏதோ விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் போல பேசிகொண்டிருப்பதெல்லாம் காலகொடுமை
ஆயிரம் சர்ச்சை இருந்தாலும், நின்றுபோன கடிகாரம் கூட இருமுறை சரியான நேரத்தை காட்டும் என்பதுபோல ஈரோட்டு அய்யா சொன்னது சரியான வார்த்தை
“கூத்தாடி பசங்களையெல்லாம் அரசியல் பேச வைக்குறானுக அந்த பயலுக, மேடையில யாரோ காசுக்கு எழுதி கொடுக்குறத அரிதாரம் பூசி பேசுற கூத்தாடிக்கு என்ன யோக்கியதை இருக்கு? என்ன அறிவுஇருக்கு? இதையெல்லாம் நீங்க சிந்திக்கோணும்…
காசுக்கு கூத்தடிக்கிற பய, வெட்கம் மானமில்லாம பலபேர் முன்னால ஆடிபொழைக்கிற பயல்லாம் இன்னைக்கு பெரிய சிந்தனையாளர் அறிவாளிமாதிரி பேசுறானே எப்படி? எல்லாம் அந்த பயலுக பார்த்த வேல
நாட்டுல எவ்வளவோ விஞ்ஞானி இருக்காங்க, சிந்தனையாளர் இருக்காங்க, காமராஜர் மாதிரி நல்ல ஆட்சியாளர் இருக்காங்க, அதுல இந்த கூத்தாடிகளுக்கு என்ன அரசியங்கிறேன்.
இந்த கூத்தாடி பசங்களெல்லாம் அரசியல் பேசி மக்கள குழப்புறத நிறுத்தணுமுங்க, இவனுக காசுக்கு என்னவோ பேசுற கூட்டமுங்க, அவனெல்லாம் அரசியல் பேசி நாம கேக்கணுமுன்னா அதவிட முட்டாதனம் எதுவுமில்லீங்க…
நீங்க கொடுக்குற காசுக்கு கூத்தடிக்கிற வேலைக்கார பயலுக அவனுக, உங்க காசுக்கு உங்கள சந்தோசபட அவன் வெட்கம் மானமில்லாம நடிப்பான், அவனெல்லாம் அரசியல் பேசினா நாடு எப்படிங்க உருப்படும்? அவனுக்கு என்ன யோக்கியதை இருக்கு?…
Atrocity! What qualification he has to speak this publicly ?இடத்தைக் கொடுத்தா மதத்தைப் பிடுங்கி கன்னடக்காரன் இவன் . இவன் பேச்சுகெல்லாம் என்ன மதிப்பு?