கேரளம் உருப்படுமா? தமிழகம் உருப்படுமா?
மாட்டுகறி தடையினை எதிர்த்து கேரள சட்டமன்றத்தில் கம்யூ,காங்கிரஸ் சேர்ந்து தீர்மானம், கேரளம் முழுக்க மாட்டுகறி விருந்து உண்டு எதிர்ப்பு
தமிழகத்தில் இப்படி எதிர்கட்சிகள் சேருமா? இவ்வளவிற்கு திராவிட கட்சிகள் தான் பெரிய கட்சிகள். ஆரிய சட்டத்திற்கு எதிராக 60 ஆண்டுகாலம் ஆண்டதாக சொல்லும் திராவிட கட்சிகள் நிலை என்ன?
பெரும் எதிர்ப்பு என ஒன்றுமில்லை, திமுக ஒரு மாதிரி முணங்குகின்றது, அதிமுக கிட்டதட்ட மயான நிலை
பெரும் எதிர்கட்சிகள் இணைந்து அமர்களமான எதிர்ப்பினை தெரிவிக்கும் காட்சி கேரளத்தில் தெரிகின்றது, இங்கோ ஆளும் கட்சியே இவ்விஷயத்தில் இணைவதாக தெரியவில்லை.
கேரளம் உருப்படுமா? தமிழகம் உருப்படுமா?
அதிமுகவினை விடுங்கள், அதற்கு என்றுமே கொள்கை கிடையாது , ஆனால் திமுக? வழக்கமாக எதிர்கட்சியானால் போர்குணத்துடன் சீறும் திமுக
ஒன்றுமில்லை, ஒரு பெரும் எதிர்ப்புமில்லை
தேசியம் பேசிய கேரளம் தன் உரிமை காக்க சிலிர்ந்து நிற்பதும், 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள், சிலிர்க்க வேண்டிய நேரத்தில் கம்மென்று தமிழத்தில் கிடப்பதும் விசித்திரமான காட்சிகள்
இதே இடத்தில் இளவயது கலைஞர் என்றால் அனுதினமும் நோன்பு துறப்பு நேரத்தில் மாட்டுகறி விருந்து நடத்தி, ஒரு வித்தியாசமான கோணத்தில் போராட்டத்தை திருப்பி மத்திய அரசை திணற அடித்து ஒரு வழி செய்திருப்பார்
இந்தி எதிர்ப்பு, மிசா, 1985ன் ஈழ டெசோ என அவரின் அந்த நகர்வுகள் சுவாரஸ்யமானவை
கலைஞரோடு திராவிட குரல் விழுந்துவிட்டது என்ற சூழ்நிலை இருப்பதுதான் நிஜம், மகா சோகமும் கூட..