கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது

கேரளாவின் மழைக்கு அரபு நாடு அள்ளி கொடுத்தது மத்திய அரசு கிள்ளிகொடுத்தது என பலர் கிளம்பி இருக்கின்றான்

கேரள அரேபிய தொடர்புகள் நபிபெருமான் காலத்திற்கும் முந்தியவை. இந்தியாவின் முதல் இஸ்லாம் மன்னன் மலையாளியே

இந்தியா அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கபடும் நாடு, நமக்கு தெரிந்தே நிலநடுக்கம் முதல் பெரும் வெள்ளத்தாலும் பாதிக்கபடும் நாடு, அப்பொழுதெல்லாம் அரபு நாடுகள் அள்ளி கொடுத்தார்களா?

இங்கே விடுங்கள், பக்கத்து நாடு பாலஸ்தீனமும், சிரியாவும் பட்டினியால் சாகும்பொழுது இவர்கள் என்ன கொடுத்தார்கள்?

நிச்சயம் மனிதாபிமானத்தில் கொடுத்தார்கள் என சொல்லமுடியாது, அப்படி கொடுத்திருந்தால் ஏகபட்ட விஷயங்களுக்கு கொடுத்திருக்க வேண்டும்

ஆனால் விஷயம் அது அல்ல‌

அரபு நாடுகளில் பல தொழில்கள் நடத்துபவர்கள் மலையாளிகள், 1930களில் கொழும்பில் இருந்தது போல இன்று அவங்கள் அங்கு குறிப்பிட்ட செல்வாக்கு கொண்டவர்கள் , அதனால் இது நடந்திருக்கலாம்

அரபு நாடுகள் ஏராளமான பணமும் குறைந்த மக்கள் தொகையும் , சிறிய பரப்பளவும்கொண்டவை, சில லட்சகங்களிலே அவர்கள் மக்கள் தொகை முடிந்துவிடும்

இந்தியா மிகபெரும் நாடு என்பதாலும் ஏகபட்ட விஷயங்களை கவனிக்கவேண்டிய நாடு என்பதாலும் முதற்கட்டமாக 500 கோடி கொடுத்தது, இன்னும் செய்வார்கள்

அதற்குள் அவன் அவ்வளவு கொடுத்தான், சொந்த தேசம் கண்டுகொள்ளவில்லை என்பதெல்லாம் அபத்தம்

இன்னொரு கும்பல் ஏன் சர்வதேச உதவி கோரவில்லை என கிளம்புகின்றது, அதில் இருகின்றது சிக்கல்

இப்போதுள்ள உலகில் எல்லாமே சந்தேகமானவை, நல்ல தொண்டு நிறுவணங்களில் கூட திறமையான உளவாளிகள் ஊடுருவி செய்ய வேண்டியதை செய்வார்கள்

பாகிஸ்தானில் தடுப்பூசி போடுகின்றோம் என சொல்லித்தான் பின்லேடனின் ரத்தமாதிரி பெறபட்டு அவன் கொல்லவும் பட்டான்

சுனாமியில் உதவுகின்றோம் என அலறி அடித்து புலிகள் கட்டுபாட்டு பகுதிக்கு சென்ற தொண்டு நிறுவணத்தில் ஊடுருவிய உளவாளிகள்தான் புலிகளுக்கு முடிவுரை எழுதினர்

அவசத்தில் அந்நிய சக்திகளை அனுமதிப்பது தீரா சிக்கல்களை உருவாக்கும்,

கொச்சி கப்பல்படை தளம் இன்னபிற முக்கிய இடங்கள் உள்ள பகுதியில் இன்னொரு சக்திகளை மீட்புபணி என அனுமதிப்பது ஆயிரம் முறை யோசிக்க வேண்டிய விஷயம்

கேரள வெள்ளத்தை மத்திய அரசு மிக நன்றாகவே கையாண்டு மீட்பு பணியினை செய்திருக்கின்றது, செய்துகொண்டும் இருக்கின்றது

குறை சொல்லவேண்டும் என கருதுபவர்கள் சொல்லிகொண்டே தான் இருப்பார்கள்