கேரளாவில் அரிசிக்காக ஒருவன் அடித்து கொலை
கேரளாவில் அரிசிக்காக ஒருவன் அடித்து கொல்லபட்டிருக்கின்றான், மாபெரும் கொடுமை இது
கடவுளின் சொந்த மாநிலமாம் அது, வளமைக்கு குறைவில்லை அங்கே ஒருவன் உணவுக்கு வழியின்றி அரிசி திருடியிருக்கின்றான், அடித்து கொன்றுவிட்டார்கள்
கேரளாவில் மழை அதிகம், மலையும் அதிகம் அரிசி அவ்வளவாக விளையாது, அந்த நதிகளை கிழக்கே தமிழகத்திற்கு திருப்பிவிட்டால் இங்கே அரிசி முப்போகம் விளையும்
கடவுள் ஒரிடத்தில் செழுமையும் அதனை அடுத்து வறட்சியும் படைத்து வைத்திருப்பது மனிதன் சரியாக நடந்துகொள்கின்றானா, பகிர்ந்து வாழ்கின்றான என சோதித்து பார்பதற்காக, இந்த விஷயத்தில் கடவுளுக்கு ஏமாற்றமே
கேரளாவில் இவ்வளவிற்கும் பொதுவுடமை அரசு ஆளும் காலமிது, அரிசிக்கு அலையவிட்டுத்தான் பொதுவுடமை சாம்ராஜ்யம் அமைக்கின்றார்கள் போல
ஒரு பிடி அரிசிக்கு கொலை நடக்குமா என்றால் இதோ நடந்திருக்கின்றது, அரிசி பஞ்சம் என்பது அனுபவித்து பாராமல் புரியாது.
ஏழ்மையின் அடித்தளத்தில் இருக்கும் மக்களால் உருவான கட்சி அது என்பதால் , அரிசிக்காக ஏராளமானோர் ஏங்கும் வலி அதற்கு புரிந்தது
திராவிட கட்சிகள் அரிசி கொடுத்து ஏமாற்றின என்பார்கள், அது எத்தனை ஆயிரம் உயிர்களை காப்பாற்றியது என்பது பற்றி சொல்லவே மாட்டார்கள்.
தமிழகம் திமுக ஆட்சியில் எவ்வளவு முன்னோடி மாநிலமாக இருந்தது என்பதை இந்தியா உணரும் தருணமிது.