கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை சீரழித்த 5 பாதிரியார்கள்
கேரளாவில் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை சீரழித்த 5 பாதிரியார்கள் மேல் நடவடிக்கை : செய்தி
பாவமன்னிப்பு என்பது கத்தோலிக்க திருச்சபையில் மட்டும் நடக்கும் நிகழ்வு, சீரோ மலபார், ரஷ்யன் ஆர்தோடக்ஸ் சபைகளிலும் அதன் சாயல் உண்டு
பாவமன்னிப்பினை ஒருவர் பாதிரியிடம் அறிக்கையிட்டால், அது ரகசியமாக வைக்கபடவேண்டும் என்பது திருச்சபை விதி
இந்த பாதக பாதிரிகள் அதை வைத்தே அப்பெண்ணை மிரட்டி சீரழித்திருக்கின்றார்கள்
விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை சிலர் கொல்ல முயன்றபொழுது, உங்களில் குற்றமில்லாதவன் முதற்கல்லை எறியட்டும் என சொல்லி அப்பெண்ணை விடுவித்து, பெண்ணே நானும் உன்னை குற்றம் சாட்டவில்லை, இனி பாவம் செய்யாதே என சொன்னவர் இயேசு
அவர் வழிவந்த இந்த கொடூர சாமிகள் எப்படிபட்ட அலங்கோல விஷயத்தை செய்திருக்கின்றார்கள்??
இது மாபெரும் குற்றம் அநீதி, வாடிகன் நடவடிக்கை எடுப்பது ஒருபக்கம் இருந்தாலும் இந்திய அரசின் நடவடிக்கை உடனடி தேவை..
ஆக கத்தோலிக்க திருச்சபை சாமியார்கள் வசமாக சிக்கிவிட்டனர்
சும்மாவே கத்தும் சங்கிகள், பக்தாஸ்க்கு எல்லாம் இனி தீபாவளி
ஆளாளுக்கு பொங்கி எழுவார்கள், நாம் ஏதும் சொன்னால் சிலுவையில் அறையவும் தயங்கமாட்டார்கள்
S Prema , Jebamani Mohanraj , Geetha Suresh, Pugal Machendran Pugal உங்கள் காட்டில் மழை பெய்கின்றது, நனையுங்கள். திருவிழா தொடங்கிவிட்டது ம்ம்ம் ஆடுங்கள்
பாதிரிகளை பாவடைகள் என சொல்லி சொல்லியே அவர்களை பாவாடைகளை தேடி செல்லவைத்த கொடுமையாளர்கள் நீங்கள்தான் 🙂
பெண்ணை பங்கு போட்ட பங்கு தந்தையர்கள் என அழிச்சாட்டியம் செய்வதை கேட்க முடியாமல் நாங்கள் காதை மூடிகொள்கின்றோம்…
(ஆனால் திராவிட பகுத்தறிவாளர்கள் எல்லாம் இப்பொழுது சத்தமே காட்டமாட்டார்கள் என்பது வேறு விஷயம்)