கேரள வெள்ளத்திற்கும் காரணம் என கிளம்புவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

ராமர் பெயரால் நாட்டை கெடுத்தவர்களில் சிலர் சபரிமலை ஐயப்பனே கேரள வெள்ளத்திற்கும் காரணம் என கிளம்புவது ஒன்றும் ஆச்சரியமல்ல‌

இன்னும் சொல்வார்கள், மலையாளிகள் மாட்டுகறி அதிகம் எடுப்பதால் கடவுள் பொங்கிவிட்டா என சிரிக்காமல் சொல்வார்கள்

இயற்கை சீற்றங்களுக்கு ஆலயங்களும் தப்ப முடியாது

ஹரித்துவார் சிவன் சிலை சில ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிகொண்டிருந்தது, சுனாமியில் வேளாங்கண்ணி ஆலயம் எல்லாம் பிணங்களால் சூழபட்டிருந்தது

உலகின் மிக முக்கிய புனித ஸ்தலமான ஜெருசலேம் பலமுறை ரத்தத்தால் நிரம்பி இருக்கின்றது

இதெல்லாம் எங்கோ முடிவு செய்யபடும் விஷயங்கள், தெய்வங்களுக்கு மேலிருக்கும் பரம்பொருளின் விளையாட்டு

சபரிமலை அய்யப்பனுக்கு கோபம் வந்ததென்றால் , குருவாயூர் கடவுளுக்கு அதிகாலை எழுப்பாத ஆத்திரமா வந்தது?

கொச்சி அருகே எடத்துவாவில் கத்தோலிக்கருக்கு ஜார்ஜியார் ஆலயம் உண்டு, முதல்முறை செல்வோர் புதுதுணி உடுத்தி செல்ல வேண்டும் என்பது ஐதீகம்

யாராவது அழுக்கு ஆடை உடுத்தி சென்றுவிட்டார்களா என்ன?

கேரள வெள்ளத்திற்கு புனிதமான அய்யப்பன் ஆலயத்தை விட்டுவிட்டு வேறு காரணங்களை தேடுவது நல்லது