கொஞ்சமும் அறிவில்லாத கூட்டம் யாரென்றால் இந்த முகநூல் பிஜேபி கும்பல்

கொஞ்சமும் அறிவில்லாத கூட்டம் யாரென்றால் இந்த முகநூல் பிஜேபி கும்பல்

ஸ்னைப்பரால் சுட்டார்களாம் என்றால் அய்யகோ அவ்வளவு கொடியவரில்லை நாங்கள் ரைபிளால் சுட்டோம் என ஒரே சத்தம்

ஆக சுட்டு கொல்வது தப்பே இல்லையாம். துப்பாக்கியினை சரியாக சொல்லாவிட்டால் கோபம் வருமாம்

எந்த துப்பாக்கி என்றால் என்ன? சுட்டது தமிழககாவல் துறை, அதை சொன்னால் அது எப்படி துப்பாக்கி தவறாக சொல்லலாம் என அதனையே திருப்பி திருப்பி கேட்கின்றது இக்கோஷ்டி

எந்த துப்பாக்கியால் சுட்டால் என்ன? கத்தியால் குத்தினால் என்ன ? நடந்திருப்பது படுகொலை

அதை சொல்லமாட்டேன் என்கின்றார்கள், துப்பாக்கியின்னை எப்படி தவறாக சொல்லலாம் என ஒரே சத்தம்

இறுதியாக நீங்கள் அந்த கொடுமையினை ஆதரிகின்றீர்களா என்றால் , ஆமாம் துப்பாக்கி சூட்டை ஆதரிப்போம் , சுடுவோம் என ஒரே அழிச்சாடியம்

அமித்ஷா ஏன் தமிழக பக்கமே வரவில்லை என்பதும்,மோடி ஏன் சுவர் ஏறிகுதித்து ஓடுகின்றார் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

அவர்கள் நிச்சயம் இந்த தமிழக பாஜக தாமரை மொட்டுகளுக்கே அதிகம் அஞ்சுகின்றார்கள்


அதிமுகவில் இருந்து பிரிந்த நயினார் நாகேந்திரன் பிஜேபியில் இணைந்தபொழுது தூத்துகுடி பகுதியின் எம்பி ஆக்குவோம் என உறுதி தரபட்டதாம்

இப்பொழுது சுடுங்கடா, சுடுங்கடா என பாஜக உற்சாகமாக கத்துவதை பார்த்தால் இனி நாகேந்திரன் மய்யமோ அல்லது ஆன்மீக பக்கமோதான் செல்ல வேண்டும் போலிருக்கின்றது

இனி யாரும் தங்கள் கட்சிக்க்கு தங்களை நம்பி வந்துவிட கூடாது என்பதில் பாஜகவினருக்கு எவ்வளவு அக்கறை

இப்படி ஒரு அறிவார்ந்த உறுப்பினர்கள் எந்த கட்சியிலாவது உண்டா?

தாமரை இனி மண்ணுக்கு கீழா மலரும் தமிழிசை அக்கா?


 

மத்திய அரசு மனது வைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 25 ரூபாய் குறைக்க முடியும் – ப.சிதம்பரம்

இவர் அமைச்சராக‌ இருந்தபொழுது 60 ரூபாய்க்கு பெட்ரோல் விலை இருந்தது, அப்பொழுது இவர் மனது வைக்கவில்லை போலிருக்கின்றது