கொஞ்சம் பக்கத்து நாட்டையும் பார்ப்போம்…

விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அமெரிக்காவின் உதவியுடன் சிறிலங்கா கடற்படையினால் மூழ்கடிக்கப்பட்டன : சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே வெளியிட்டுள்ளார்.

இப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டாம் தளபதியாரே.

புலிகளை அழித்தது கலைஞரும் சோனியாவும் என எவ்வளவு கஷ்டபட்டு இங்கு பேசவைத்திருக்கின்றார்கள், அதனை கெடுக்கவா பார்க்கின்றீர்??

புலிகளின் கப்பலை கடலில் நீந்தி சென்று பார்த்து காட்டி கொடுத்தது கலைஞர், உடனே அமெரிக்காவிடம் சொல்லி அழித்தது சோனியா, இந்த கலைஞர் சொன்னவுடன் சோனியாவிடம் நள்ளிரவிலே தகவல் சொன்னவர் மன்மோகன் சிங்

இதுதான் உண்மை, நீர் அமெரிக்கா கதை விட கூடாது, அது உண்மையாகவே இருந்தாலும் சொல்லகூடாது

பின் எப்படி இன்னும் கலைஞர் துரோகி என தமிழகத்தில் அரசியல் செய்ய முடியும், இங்கு 4 வோட்டு வாங்க அவரை திட்டினால்தான் முடியும்.

சிங்களர் உமக்கு என்ன?

அதனால் சொல்கின்றோம், ஈழமக்கள் எப்படியும் போகட்டும், கலைஞரை திட்டும் காரியங்களை தயவு செய்து பொய்யாக்க வேண்டாம்…

இங்கு பலர் பிழைக்க வேண்டும் அய்யா