கொஞ்சம் விசாரித்து கொடுக்கட்டும்
இலங்கையில் கிறிஸ்தவ ஆலயம் தகர்க்கபட்ட இடம் மூன்று, கொழும்பு கொச்சிகடா, நீர்கொழும்பு மற்றும் மட்டகளப்பு ஆலயம்
இதில் மட்டகளப்பு சற்று தொலைவானது என்பதாலும் கொழும்பு போல் அல்லாது பரபரப்பு வாழ்க்கைக்கு ஒதுங்கிய பகுதி என்பதாலும் அந்த குண்டுவெடிப்பினை நிகழ்த்தியவனை பற்றி தகவல் இப்படி வருகின்றது
கொழும்பு பஸ்நிலையத்தில் அவன் பேருந்து ஏறியிருக்கின்றான் கையில் பொதிசகிதமாக, மட்டகிளப்பு சென்ற அவன் இரவில் பள்ளிவாசல் பூட்டபட்டதால் வெளியிலே உறங்கியிருக்கின்றான்
அதிகாலை குளித்து தொழுகையினை முடித்தபின்பே மாதா கோவில் பக்கம் வந்திருக்கின்றான், அது பழமையான ஆலயம். அவன் இலக்கு அதுதான்
ஆனால் அவன் வருவதற்குள் ஈஸ்டர் திருப்பலி நிறைவேறி இருந்ததால் அவன் எண்ணம் ஈடேறவில்லை
எங்காவது கிறிஸ்தவர் மத்தியில் சாகவேண்டுமே என தவித்த அவன்
சீயோன் தேவாலயம் வந்து அங்கு வழிபாட்டு நேரம் எல்லாம் விசாரித்திருக்கின்றான்
ஈஸ்டர் கொண்டாட்டதில் இருந்த கிறிஸ்தவர்கள் அவனைபற்றி விசாரிக்க தான் ஞானஸ்நானம் பெற்று கிறிஸ்தவனாக மாற வந்திருப்பதாக சொல்லியிருக்கின்றான்
இது போதாதா? அது பிரிவினை கோஷ்டி ஆலயம் போல தெரிகின்றது, சில காரணங்களுக்காக அதை குறிவைத்திருகின்றனர்
“வாராய் நீ வாராய்” என அவர்கள் வரவேற்க “போகுமிடம் வெகு தூரமில்லை..” என அவனும் நடந்திருக்கின்றான்
வழிபாடு தொடங்கும்பொழுது எல்லோரையும் பரலோகத்திற்கே அழைத்து சென்றிருக்கின்றான்
எதற்கு சொல்கின்றோம் என்றால் யார் வந்தாலும் ஞானஸ்நானம் கொடுக்கும் கிறிஸ்தவ கும்பல் இனியாவது கொஞ்சம் விசாரித்து கொடுக்கட்டும்
இயேசு ஒன்றும் கோபபடமாட்டார்..