கொடூர தலைமுறையா உருவாகிக் கொண்டிருக்கிறது?

அது முதலிலே வில்லங்கமான செய்தியாகத்தான் தெரிந்தது, அதாவது ஒரு மூதாட்டி மானபங்கபடுத்தி கொல்லபட்டிருந்தார், இடம் ஆரல்வாய்மொழி , அஞ்சுகிராமம் மலைப்பகுதி

கைதானவர்கள் எல்லாம் 20 வயதிற்கு கீழ்பட்டவர்கள், இந்த மூதாட்டி கொலையில் அவர்களை விசாரிக்கும்பொழுது போலீஸ் அரண்டு நிற்கின்றது என்கின்றார்கள்

பேரன் வயதிக்கும் அந்த கொடூரர்களிடம் நடக்க முடியாமல் பைக்கில் கொண்டு சென்றுவிட சொல்லியிருக்கின்றார் அந்த பெண், இவர்கள் மனதில் வரகூடாத எண்ணம் வந்து அந்த பாதகத்தை செய்திருக்கின்றார்கள்

காட்டுமிராண்டிகள் கூட , ஏன் விலங்குகள் கூட செய்ய அஞ்சும் காரியமது. அதிர்ச்சி அதோடு ஓயவில்லை அதன் பின்னர்தான் ஆரம்பமாகின்றது, பலரை கொன்றிருக்கின்றார்களாம்

மேலும் 4 பெண்களை கொன்றதை ஒப்புகொண்டிருந்தாலும், இன்னும் ஏராளமான பெண்களை அவர்கள் கொன்று இப்பகுதியில் வீசியிருக்கலாம் என பெரும் பரபரப்பு நிலவுகின்றது

தமிழகத்தில் இந்த விஷயம் எவ்வளவு பெரும் தாக்கம் என தெரியவில்லை, அங்கே நீட் தேர்வு, உதயநிதி, கலைஞர் ரிட்டர்ன் , விஜயபாஸ்கர் கூட்டாளி என மீடியாக்கள் சொல்லிகொண்டிருக்கின்றன‌

விஷயம் பெரும் சீரியசான பிரச்சினை, கிட்டதட்ட ஆட்டோ சங்கருக்கு நிகரான கிரைம் விஷயம் நடந்திருக்கின்றது, இது 10 பதின்மவயதினரின் கூட்டு சம்பவம் எனும்பொழுது இந்த தலைமுறையினை நினைத்தால் பகீரென்கின்றது

அந்த சிறுவர்கள் மனநலம் பாதித்திருந்தாலொழிய இம்மாதிரி கொடூரத்தினை செய்ய முடியாது, இது பெரும் தலைமுறை மனசிக்கலின் அறிகுறி

வெளிநாட்டு பத்திரிகைகள் மிக சீரியசாக சொல்லிகொண்டிருக்கின்றன, உள்ளுர் மீடியாக்களில் சத்தமே இல்லை

குலை நடுங்கவைக்கும் அந்த சம்பவ‌ பகுதியினை நினைத்தாலே மயக்கம் வருகின்றது, இப்படியான கொடூர தலைமுறையா உருவாகிவிட்டது?

விசாரணை முறையாக நடந்தால் தமிழகத்தை உலுக்கும் தகவல்கள் வரலாம் என்கின்றார்கள்

எதற்கும் மனதை கொஞ்சம் தைரியமாக வைத்துகொள்வது நல்லது