கொடூர நாள் இந்த ஆகஸ்ட் 14

No automatic alt text available.அதுவரை அப்படி ஒரு நாடு இல்லை, அது உருவாக சாத்தியமோ அவசியமோ இருந்ததில்லை. அது இந்தியா என்றே அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்து மவுண்பேட்டன் காலம் வரை சொல்லபட்டது

இது வளமான நாடு, இதன் வருமானமும் செல்வமும் என்ன என்பது வெள்ளையனுக்கு புரிந்தது. இப்படியே விட்டுவிட்டு சென்றால் இந்நாடு எழும்பிவிடும், எழும்பினால் அது தனக்கு பின்னாளில் ஆபத்து, என்ன செய்யலாம் அவர்களுகுள்ளே அடித்து சாகட்டும் என்ற திட்டமிட்டு பிரித்தான்

அதுவரை உலக சரித்திரத்திலே இல்லாத, பாருமே கேள்விபட்டிராதா பாகிஸ்தான் எனும் தேசம் அப்படித்தான் இதே நாளில் அதாவது ஆகஸ்ட் 14ல் உலகிற்கு அவனால் அறிவிக்கபட்டது.

உலகிலே இறக்குமதியான ஒரு மதம் தன் சொந்தநாட்டை பிரிக்குமளவு சென்றது அங்குதான். அதனை அவர்கள் கொஞ்சமும் நினைத்துபார்க்கவில்லை என்பதுதான் சோகம், அந்த அளவு வெறியேற்றபட்டாயிற்று

அதுவரை ஒற்றுமையாக போராடிய இந்தியா இந்த அறிவிப்பிற்கு பின் தனக்குள் அடித்துகொள்ள தொடங்கியது. ரத்த ஆறு ஓடியது மிக சந்தோஷமாக மூட்டை கட்டி வெளியேறினான் வெள்ளையன்

அதுவும் இரு பாகிஸ்தானை உருவாக்கி மிக தந்திரமாக இத்தேசத்தின் இரு எல்லையிலும் இரத்த ஆறு ஓடவைத்து, பார்த்து ரசித்துவிட்டே விடைபெற்றான்

அன்று தொடங்கிய அந்த மோதல், அதற்கு முன் இல்லாத மோதல் இன்றுவரை தொடர்கின்றது.

ஒரு வழியாக கிழக்கு பாகிஸ்தானுக்கு கத்தரி போட்டு கிழக்கு எல்லையினை அமைதியாக்கிவிட்டோம்

மேற்கு பாகிஸ்தான் இன்னும் தீராத தலைவலியாகவே, ஒற்றை தலைவலியாகவே இன்னும் தொடர்கின்றது.

அன்று ஒரே தேசம், ஒரே போராட்டம். இன்று இரு துண்டாக பிரிந்து ஒன்றையொன்று சுத்தமாக அழிக்க குறிபார்த்து நிற்கின்றன.நம்ப முடியவில்லை ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்

கராச்சியில் ஒருவனை பிரிட்டிஷ்காரன் அடித்தால் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது, கல்கத்தாவில் ஒருவனை வெள்ளையன் அடித்தால் லாகூர் கொந்தளித்தது

லாகூரில் ஒன்று என்றால் இந்தியா முழுக்க ஆர்பரித்தது, அப்படியும் ஒரு காலம் இருந்திருக்கின்றது.

இன்று அதே கராய்ச்சியினை லாகூரை குறிபார்த்து இந்திய கனையும், அதே சென்னையினை கல்கத்தாவினை குறிபார்த்து பாகிஸ்தானிய கனையும் தயாராக இருக்கின்றது

காலம் வெறும் 70 வருடங்களில் எவ்வளவு பெரும் குரோதத்தை வளர்த்து விளையாட்டு காட்டிகொண்டிருக்கின்றது.

மலேசியாவும் சிங்கப்பூரும் பிரிந்த நாடுகள்தான் ஆனால் இரண்டும் செல்வ செழிப்பாக இருக்க காரணம் எல்லை அமைதி, ராணுவத்திற்கான செலவு குறைவு

ஆனால் இந்த பாகிஸ்தான் எனும் இம்சைக்கு உலகநாடுகள் அள்ளிகொடுக்க நாமும் செலவழித்தே தீரவேண்டிய நிலை.

இந்த இருநாடுகளும் இணைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்பதுதான் ஏக்கம், அது இனி சாத்தியமில்லை அவர்கள் மதவெறியில் எரிய, இத்தேசமும் அதே பாதையில் நிற்கும் வரை சாத்தியமில்லை

உண்மையினை உணரும் வருங்கால சந்திகள் காலத்தில் ஜெர்மன் இணைந்தது போல் இத்தேசங்களும் இணையலாம்.

காலமே பிரிக்கும் காலமே இணைக்கும்

அதுவரை நம் இதயத்தின் ஓரத்தை வெட்டி அதனையே நமக்கு எதிரியாக்கி அதனையே நம்முடன் மோத செய்த கொடூர நாள்தான் இந்த ஆகஸ்ட் 14..