கொரிய தீபகற்பத்தில் போர் மேகங்கள் கலையும் சூழல்

Image may contain: 1 person, selfie and close-upஒரு வழியாக கொரிய தீபகற்பத்தில் கருத்திருந்த போர் மேகங்கள் கலையும் சூழல் உருவாகியிருக்கின்றது

அணுகுண்டு எங்கள் பாதுகாப்பிற்காக, யாரையும் ஆக்கிரமிக்க அல்ல என வடகொரியா தரப்பு சொல்லி பதற்றத்தை தணித்தாலும் உண்மையில் அதனிடம் செயற்கைகோள் பலம் இல்லை, அந்த பலம் இன்றி ஏவுகனைகளை அமெரிக்கா நோக்கி செலுத்தினால் சரியான இலக்கை அடையாது என்பதால் யோசிக்கின்றது வடகொரியா

இப்பக்கம் அமெரிக்காவோ சண்டை இடலாம், அந்த காட்டுபயல் கண்டமேனிக்கு ஏவுகனையினையில் அணுகுண்டு பொறுத்தி ஏவினால் என்ன செய்ய? முழு தடுப்பு சிஸ்டம் என நம்மிடம் இல்லை என யோசனையில் நழுவுகின்றது

இதில் ரஷ்ய சீன எச்சரிக்கைகளும் இன்னொரு பக்கம்

Image may contain: 1 person, close-upதென்கொரியா இந்த இடத்தில் அட்டகாசமான நகர்வினை செய்கின்றது, உண்மையில் இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசினை தென் கொரிய அதிபருக்கே வழங்க வேண்டும்

மனிதர் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார், 60 வருடத்திற்கு முன்பு நாம் ஒரே கொரியர்கள், எப்படியோ பிரிந்துவிட்டோம் இனி இணைந்து செயல்படுவோம் என நேசகரம் நீட்டுகின்றார்

முதலில் தென்கொரியாவில் நடக்கும் குளிர்கால ஓலிம்பிக் போட்டிக்கு வடகொரியாவிற்கு அழைப்பு விடுத்தார், அதுவும் சம்மதித்தது

அடுத்து பெண்கள் ஹாக்கி அணி இருநாட்டு வீராங்கனைகளும் இணைந்த அணியாக அறிவித்துவிடுவோமா? என்ற்கின்றார், வடகொரியாவும் இறங்கி வந்திருக்கின்றது

இரு நாடுகளும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகின்றன, இரு நாட்டு வீரர்களும் இணைந்து விளையாடபோகும் காட்சியினை உலகம் காண போகின்றது

விட்டுகொடுத்தால் கெட்டுபோகமாட்டார்கள் என இறங்கி வந்திருக்கும் தென்கொரியா பெரும் அமைதி வழியினை உலகிற்கு காட்டுகின்றது.

உண்மையில் போர் என்றால் அப்படித்தான், ஆனானபட்ட கிருஷ்ணபரமாத்மா நடத்திய போரிலே பாண்டவர்களும் அர்ஜூனன் மனைவி வயிற்று கருவுமே காப்பாற்றபட்டது மீதி எல்லாம் அழிவு

அந்த அஸ்வத்தாமன் பாத்திரத்தில்தான் இன்று அந்த வடகொரிய அதிபர் இருக்கின்றார், ஆனால் காக்க கிருஷ்ணன் இல்லை

விளையாட்டு இரு தேசங்களுக்கு இடையில் வெறியினை ஏற்படுத்தும் என்றே சில கிரிக்கெட் ஆட்டங்கள் சொன்னது, சில கால்பந்து ஆட்டமும் சொன்னது

தென்கொரியாவோ விளையாட்டு ஒற்றுமையினை ஏற்படுத்தும் என சொல்லி செய்து காட்டுகின்றது

இந்த ஒற்றுமை வளரட்டும், அமைதி செழிக்கட்டும், சகோதரத்துவம் மலரட்டும், கொரியா ஒற்றுமையில் வளம் கொழிக்கட்டும்

எனினும் அமெரிக்கா எனும் நாட்டாமை இந்த ஒற்றுமைகளை எல்லாம் விரும்பாது, ஏற்கனவே தென்கொரியாவில் இருக்கும் அமெரிக்க ராணுவ முகாம் மூடபட வேண்டும் என மக்கள் போராட தொடங்கிய பின்புதான் வடகொரியா இந்த பேயாட்டம் ஆடுகின்றது

அதனால் அமெரிக்காவினை முழுக்க நம்பவும் முடியாது, வடகொரியாவால் தென் கொரியர்களுக்கு ஆபத்து என்ற நிலை நீடிக்கும் வரையில்தான் அது தென்கொரியாவில் நிற்க முடியும்

எப்படியோ ஜெர்மனி இணைந்தது போல கொரியாவும் இணையட்டும்

அது இருக்கட்டும், நம் நாட்டிற்கு வரலாம். இதுபோல மோடியும் நவாஸ் ஷெரிப்பும் இணைந்து இந்திய பாகிஸ்தானிய கிரிக்கெட் அணிகள் இணைந்து ஆஸ்திரேலியாவோடு மோதும் என அறிவித்தால் எப்படி இருக்கும்?

இந்தியாவும் பாகிஸ்தானும் 1930க்கு முன்பிருந்த அந்த ஒற்றுமையான காலங்களுக்கு திரும்பினால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

மதவாதத்தை தூக்கி எறிந்தால் அது சாத்தியம்

காலம் எல்லாவற்றையும் செய்யும், அப்படி இத்தேசங்களும் ஒற்றுமையாய் ஒன்றாகட்டும், அமைதியும் சமாதானமும் நிலவட்டும்

ஆக போகி கொண்டாட தயாராகின்றது தென்கொரியா

“போடா எல்லாம் விட்டு தள்ளு, பழசை எல்லாம் சுட்டு தள்ளு புதுசா இப்போ பொறந்தோமுண்ணு எண்ணி கொள்ளடா டேய்” என கிளம்பிவிட்டார்கள்

அவர்களை மனமார வாழ்த்தலாம்