கொரோனாவுக்கு எதிரான போரில் இரண்டாம் வளையத்தில் நுழைந்திருக்கின்றது இந்தியா.
அதாவது கொரோனா தாக்கி அதன் பாதிப்பு தெரிய குறைந்தது 10 நாட்கள் ஆகும், அப்படி இந்தியாவில் முதல் அறிகுறிகள் தென்பட்டு அவர்கள் தனிமைபடுத்தபட்டு நாடு பெரும் அவசரநிலையிலும் சிக்கிவிட்டது
இப்பொழுது விவகாரம் என்னவென்றால் அந்த தொடக்கத்தில் அல்லது நேற்றுவரை சிக்கியவர்கள்தான் நோயாளிகளா இல்லை ஏராளமானோர் உடலில் மர்மமாக வளர்ந்த கொரோனா குத்தாட்டம் போடபோகின்றதா என எதிர்பார்க்கும் தருணம்
கொரோனா அப்படித்தான், வெறும் 4 பேர் 40 பேர் என இருந்த அமெரிக்க நிலை , சட்டென உயர்ந்து லட்சத்தை தாண்டி செல்கின்றதல்லவா அப்படி சட்டெனெ எகிறும்
இந்த மாதிரி கடும் காலகட்டத்தில் இந்தியாவும் நுழைகின்றது
கண்ணிவெடியில் கால்வைத்த வீரனை போல , சுனாமி அறிவிப்பு செய்துவிட்டு கடலையே பார்க்கும் அதிகாரிகள் போல பதைபதைப்புடன் இரண்டாம் சுற்றினை எதிர்கொள்கின்றது தேசம்
இந்த ஞான பூமியின் சூட்சும சக்திகள் முதல் இந்நாட்டு மக்களின் ஆன்ம பலம் வரை எல்லாமும் சேர்ந்து நாட்டை மீட்டெடுக்கட்டும்.