கோட்டையில் அன்புமணி கொடியேற்றுவார் : ராமதாஸ்

கோட்டையில் அன்புமணி கொடியேற்றுவார் : ராமதாஸ்

ஸ்பான்சர்கள் தாங்கள் பராமரிக்கும் கோட்டையில் விளம்பரம் செய்யலாமாம்

ஆக டால்மியா செங்கோட்டையினை தத்தெடுத்திருப்பது போல பாமக ஏதோ ஒரு பழம் கோட்டையினை தத்தெடுத்து கொடியேற்ற போவது புரிகின்றது.


 காவிரி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது – தமிழிசை

அக்கா வந்துட்டாங்க……

அக்கோவ் காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செய்வது அரசியல் என்றால் மத்திய அரசு செய்வதன் பெயர் என்ன?


 

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை ஒதுக்கீடு செய்ய முடியாது – உச்சநீதிமன்றம்

வலையில் சிக்கிய மான்போல தமிழகம் துடித்துகொண்டிருக்க, அதனை அலற வைத்து பார்க்கும் ஒரு வேட்டைக்காரன் மனநிலையினை அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்

“டேய் தமிழ்ஸ், போராடுங்கடா.. போராடுங்க” என அவர்கள் வம்ம்புக்கு இழுப்பது தெரிகின்றது

இதெல்லாம் பலநாள் கோபம், இப்பொழுது ஒவ்வொன்றாய் வருகின்றது

நாளைக்கு என்ன சொல்லி வம்பிழுப்பார்களோ?


 

திறந்துவிட கர்நாடாகவில் தண்ணீர் இல்லை : சித்தராமய்யா

இவரும் இந்த தமிழ்சினிமாகாரர்களும், கிறிஸ்தவ போதகர்களும் ஒன்று.

எவ்வளவுதான் இருந்தாலும் இல்லை என‌ அழுதுகொண்டே இருப்பார்கள்

மிஸ்டர் சித்து, அணைகதவினை திறங்கள், தண்ணீர் இருந்தால் வந்துவிட்டு போகின்றது

நீர் இல்லாவிட்டால் வராது, அவ்வளவுதானே விஷயம்.