கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கோட்டையில் கொடியேற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
ராஜாஜி, காமராஜர், அண்ணா காலம் வரை தமிழக முதல்வர் கொடியேற்ற அனுமதி இல்லை
கலைஞர் வந்தபின் இதுசம்பந்தமாக சில கேள்விகளை கேட்டார். பதில் இல்லை.
ஒரு மாநில முதல்வர் இந்நாட்டின் கொடியினை சுதந்திர நாளில் ஏற்றமுடியவில்லை என்றால் அந்த பதவிக்கு என்ன மரியாதை என கேட்ட அவரின் கேள்விக்கு செவிடாக இருந்தது டெல்லி.
தேசிய கொடியினை நீங்கள் ஏற்றுங்கள், மாநில கொடியினை நாங்கள் ஏற்றுகின்றோம் என சொல்லிவிட்டு ஒரு கொடியும் அமைத்திருந்தார். மேலே தேசியகொடி கீழே தமிழ அரசு சின்னமாக அது மின்னியது.
(படத்தில் கலைஞர் கையில் இருக்கும் கொடி அதுதான்
கன்னடம் இப்பொழுதுதான் தனிகொடி அமைக்கின்றது, ஆனால் 1970களிலே தமிழ்கொடி அமைதிருந்தவர் கலைஞர்)
விஷயம் டெல்லிக்கு சென்றது. எல்லா மாநிலமும் கொடி பிடிப்பதை டெல்லி விரும்பவில்லை, அது வேறுகதை சொன்னது
வங்கத்திலும், கேரளாவிலும் கம்யூனிஸ்ட் அரசாங்கம், நீங்கள் தமிழக கொடி பிடித்தால் அவர்கள் செங்கொடி பிடிபார்கள், அது அந்நிய நாட்டுகொடியாகிவிடும், நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து என ஆலோசனை சொன்னது
விடவில்லை கலைஞர், தமிழக கொடியினை ஏற்றியே தீருவேன் என்றார், குழப்பத்தின் உச்சியில் ஆலோசித்த டெல்லி, சரி தேசிய கொடியினை முதல்வரே ஏற்றட்டும் என சொல்லி அனுமதி கொடுத்தது.
கோட்டையில் தேசியகொடி ஏற்றிய முதல் முதல்வர் கலைஞர்தான், அதன் பின் வந்தவர்களுக்கு அதெல்லாம் தெரியும் ஆனால் அவர்களும் ஏற்றுவார்கள், ஜெயலலிதா கூட கலைஞர் பெற்ற உரிமை எனக்கு எதற்கு என சொல்லி அந்த கயிற்றில் தொங்க துணியவில்லை
அந்த கோட்டை ராணுவத்தினுடையது, தமிழக அரசு ஒரு புல்லை கூட பிடுங்க முடியாது
தமிழக அரசு தன் சொந்த கட்டத்தில் கொடியேற்ற வேண்டும் அதுதான் உரிமை என சொல்லித்தான் அந்த புதிய சட்டமன்றகட்டத்தை கலைஞர் கட்டினார்
ஆனால் ஜெயாவிற்கு பொறுக்கவில்லை, அதே கோட்டையில் குடிபுகுந்தார். ஆனால் கலைஞர் பெற்றுகொடுத்த கொடிஏற்றும் உரிமை மட்டும் அம்மையாருக்கு உரைக்கவில்லை
இன்று எடப்பாடி பழனிச்சாமி கொடியேற்றுகின்றார்
அந்த கொடியினை கலைஞர் கட்டிய புதிய சட்டமன்றத்தில் ஏற்றினால் இன்னும் நன்றாக இருக்கும்.
நிச்சயம் ஒரு காலத்தில் அது நடக்கும், அன்று கலைஞரை எல்லோரும் நினைவு கூர்வார்கள்,