கோலாலம்பூரில் நண்பர் கென்னடியுடன்
நண்பர்களில் பலர் அவ்வப்போது கோலாலம்பூர் வருகின்றார்கள், சிலர் நம்மை சந்திக்க அழைக்கின்றார்கள்.
அவ்வளவு தொலைவிலிருந்து வந்து, பரபரப்பான நேரத்திலும் நம்மை சந்திக்க முயல்கின்றார்கள் என்றால் அவர்களை மதித்து செல்வதுதான் சரி.
அப்படி நண்பர் Kennedi M G அவர்கள் வந்திருந்தார், 5 மாதத்திற்கு முன்பே சொல்லியிருந்தார், அதனால் நேற்று மாலை சந்தித்தாகிவிட்டது
நண்பர் சிரித்த முகத்துடன் இருந்தார், சென்னையில் கட்டுமான நிறுவணம் நடத்துவதாக சொன்னார், “சென்னையில் கட்டுமானமா?” என்று சத்தமாக கேட்டால் மவுலிவாக்கம், சென்னை விமான நிலைய கட்டடம் எல்லாம் நான் கட்டவில்லை என அவசரமாக மறுத்தார்
பழகுவதற்கு இனிமையான மனிதர், சென்னை நிலவரம் அரசியல் வியாபாரம், சர்வதேசம் என பேசினார், அருகில் அவரது மகன் சிரித்துகொண்டே இருந்தான், அவனிடம் மலையாளத்தில் பேசிகொண்டார், மனைவி கோட்டயம் பக்கம் என்றார், பல மொழிகள் தெரிந்திருக்கலாம்
கொஞ்ச நேரம் பேசிகொண்டிருந்தோம், அவர் குடும்பத்தோடு சுற்றுலா வந்தவர், அவரை பிடித்து வைத்து கதற கதற பேசி கொல்வதில் அர்த்தமில்லை, அதனால் கொஞ்ச நேரம் பேசிவிட்டு வந்தாயிற்று
ஓரளவு சந்திக்க விரும்புவர்களை எல்லாம் சந்தித்துகொண்டுதான் இருக்கின்றேன் Jesinth, Raja Paul Ignatius , இருவர் மட்டும் மிஸ்ஸிங், காரணம் அவர்கள் வந்த நாட்களில் சந்திக்க முடியாத சூழல். அது ஒன்றுதான் காரணம்.
நண்பர் பேசிவிட்டு கிளம்பும்பொழுது குடும்பத்துடன் ஒரு ஏரியா பக்கம் சுற்றபோவதாக சொன்னார், அவரை பிடித்து காதோரம் “அய்யா குடும்பத்தோடு அங்கு ஒரு விவரமுள்ளவன் செல்வானா?, அது கொண்டாடி தீர்க்கவேண்டிய இடமல்லவா?” என சொல்ல வார்த்தை வாய் வரை வந்தது
பக்கத்தில் மகன் பன்னீர்செல்வம் பக்கம் பாண்டியராஜனை போல ஓட்டிகொண்டிருந்தான், அதனால் சொல்லமுடியவில்லை
அந்த இடம் “சில” கொண்டாட்டங்களுக்கான இடம், ஐரோப்பிய பாணி கொண்டாட்டத்தை கிழக்காசியவிற்கான புன்னகையோடு கொண்டாடி தீர்க்கலாம், அப்படியான தினம் தோறும் விடிய விடிய திருவிழா நடக்கும் இடம்..
அங்கு கோவிலுக்கு செல்வது போல குடும்பத்தோடு கிளம்பிய நண்பரை பார்க்க பாவமாகத்தான் இருந்தது.
நண்பர் அங்கு தன் குடும்பத்தாரால் நீட் தேர்வு மாணவனை போல நிச்சயம் கண்காணிக்கபட்டிருப்பார்
என்ன இருந்தாலும் தமிழகத்து நண்பர்களை சந்தித்துவிட்டு திரும்பும்பொழுது மனதில் வந்து அமரும் அழுத்தம் அப்பொழுதும் வந்து அமர்ந்துகொண்டது