கோழைதனத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் உள்ள வித்தியாசம்
எம்.எல்.ஏ சம்பளம் 1 லட்சம் உயர்வாம், ஸ்கூட்டி வாங்க மானியம் கொடுப்பார்களாம் காரணம் சாகும் முன் ஜெயா கண்ட கனவு அதுவாம், ஜெயா அதன் பின் கனவு காணாமல் செத்துபோனதால் பல நூறு கோடியில் மண்டபம் கட்டி இவர்கள் கனவை நிறைவேற்றுவார்களாம்
ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க நிதி இல்லையாம்
இதனை சட்டசபையில் எதிர்கட்சி கேட்கும் , புயல் வீச செய்யும் என எதிர்பார்த்தால் மருத்துவமனையினை விட்டு வேகமாக வரும் நோயாளி போல ஓடிவந்திருக்கின்றார் எதிர்கட்சி தலைவர்
நிச்சயம் அவர் அப்படி ஓடிவந்திருக்க கூடாது, நின்று கேட்டிருக்க வேண்டும்
ஏன் இவர் இப்படி செய்தார் என்றால், “கோழைதனத்திற்கும் ராஜதந்திரத்திற்கும் வித்தியாசம் தெரியாதவன் நீ ..” என்கின்றனர் திமுகவினர், அவ்வளவு தளபதி விசுவாசிகள் ஆகிவிட்டனர்
அதாவது கிட்டதட்ட புலிகேசி மன்னன் வடிவேலு படை போல ஆகிவிட்டனர் பாவம்