கோவைக்கு குடிநீர் வழங்க வெளிநாட்டு கம்பெனியாம்

கோவை நகருக்கு சூயஸ் என்ற பிரான்ஸ் கம்பெனிதான் குடிநீர் வழங்குமாம், இனி அவர்கள் வைத்ததுதான் கட்டணமாம்

கோவையினை சுற்றி எத்தனை அணைகளை காமராஜர் கட்டினார், எவ்வளவு பெரும் மக்கள் அபிமானிகள் எல்லாம் அங்கு இருந்தார்கள்

ஜிடி நாயுடு கோவையினை உலகமே திரும்பி பார்க்க வைத்தார்

அப்படிபட்ட கோவையில் சாதாரண குடிநீர் வழங்க பிரான்ஸ் கம்பெனிதான் வேண்டுமாம், ஏன் இவர்களுக்கு செய்ய தெரியாதா?

இது கூட செய்ய தெரியாத கோவைக்கு ஏன் மாநகராட்சி மண்ணாங்கட்டி

கிணற்று பாசானம் முதல் ஆழ்குழாய் கிணற்றுக்கான பம்புசெட் முதல் அங்குதான் தயாரிக்க படுகின்றது, பாசனத்திற்கு தேவையான தமிழக தளவாடங்களில் 90% அங்குதான் தயாரிக்கபடுகின்றது

அப்படிபட்ட கோவைக்கு குடிநீர் வழங்க வெளிநாட்டு கம்பெனியாம்

மாபெரும் வெட்க கேடு

இனி அவன் நமது குடிநீரை நமக்கே கொடுத்துவிட்டு பில் வசூலித்துவிட்டு போவான், எப்படிபட்ட ஒரு கொடுமை?

இதை பற்றி ஒற்றுமையாக கோவைவாசிகள் சிந்திப்பார்களா என்றால் இந்து முஸ்லீம் மார்வாடி மலையாளி என பல பிரிவுகளாக கிடக்கின்றார்கள்

ஒரு எதிர்ப்பு இல்லை, மகா அவமானம் இது

போகிற போக்கில் இனி தாலுகா பணிக்கு அமெரிக்க கம்பெனி, வரி வசூலிக்க பிரிட்டன் கம்பெனி என கோவைக்குள் வந்தாலும் ஆச்சரியமில்லை

சூலூர் ராணுவதளம் எல்லாம் அங்குதான் உண்டு, வெளிநாட்டு கம்பெனிகளை அப்பக்கம் இப்படி பொதுசேவைக்கு விட்டால் உளவு பார்க்க மகா வசதி

சுதந்திரம் அடைந்த்து இத்தனை காலத்தில் ஒரு நகராட்சிக்கு , அதுவும் மலை சூழ் அணை சூழ் நகராட்சிக்கு குடிநீர் கொடுக்க வெளிநாட்டு கம்பெனியினை அமர்த்தியிருப்பது மாபெரும் அவமானம்

வெள்ளையன் காலத்திலே தென்னிந்தியாவின் மான்செஸ்டர், லூதியானா என பெயர் பெற்ற கோவை அதன் பின் என்ன சாதித்தது?

இந்து முஸ்லீம் பிரிவினையில் நாசமாய் போய்விட்டது என்பதுதான் பெரும் சோகம்…